Published on 20/02/2019 | Edited on 20/02/2019

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட வேளைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் பாஜக நேற்று தமிழகத்தில் அதன் கூட்டணியை உறுதி செய்தது. அதிமுக, பாமக, புதிய தமிழகம் ஆகிய காட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. மேலும் தேமுதிக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் காங்கிரஸ், திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், திமுக கட்சிகள் தங்கள் கூட்டணியின் பெயரை மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற தற்போதைய பெயரை மக்கள் முற்போக்கு கூட்டணி என்று மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இந்த பெயர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.