Skip to main content

308 கிலோ ‘டேட்டிங் போதை மருந்து’ பறிமுதல்!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

308 கிலோ அளவுக்கு டேட்டிங் போதைப் பொருள் சிக்கியுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 

ketamine

 

 

 

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் சார்பில் பேன் இந்தியாவின் ஆப்பரேஷன் விட்டமின், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் மீதான சோதனை வேட்டை நடத்தப்பட்டது. அதன்படி கோவா, வதோதரா மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரித்து வந்த மருந்து நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிறுவனங்களில் இருந்து இலங்கை, மொசாம்பி, இங்கிலாந்து, கென்யா, மலேசியா, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் செய்யப்படுவதும், பணப்பரிவர்த்தனைகள் ஹவாலா முறையில் நடத்தப்பட்டதும் தெரியவந்தது. 
 

அது மட்டுமின்றி போதைப்பொருட்களை சோதனை நடத்தியதில் 308 கிலோ எடையுள்ள கீட்டமின் எனப்படும் டேட்டிங் போதைப்பொருள், கோக்கெய்ன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறுநீரகம், பித்தப் பைகளை பாதித்து உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் இந்த வகை போதைப் பொருட்களை உற்பத்தி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ப்ளீஸ் ஒரு சிகரெட் கொடுங்க...போலீசிடம் கெஞ்சிய இளம்பெண்..!"

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

வழிப்பறித் திருட்டில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் பலரை பிடிக்கும் போலீஸார், அவ்வப்போது மக்களின் கவனத்தை திசை திருப்பி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்களையும் மடக்கி சிறையில் தள்ளுவது வாடிக்கை. இப்போது, சென்னை தேனாம்பேட்டை போலீஸார் ஸ்வாதி என்ற இளம்பெண்ணையும், அவனது காதலன் ராஜூவையும் வழிப்பறித் திருட்டில் கைது செய்திருக்கின்றனர்.

 

police

 

அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறிக்கும் காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிவந்த அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

"அரியலூரை சேர்ந்த அந்த பெண், சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அவர், இப்போது காதலனுடன் சூளைமேட்டில் வீடு எடுத்து தங்கி உள்ளார். மது, கஞ்சாவுக்கு அடிமையான அவர், இப்போதே காதலனுடன் தனிக்குடித்தனம் வரை வந்துவிட்டார். அதுவும் ராஜா 2-வது ஆளாம். இதற்கு முன்னாடி ஒருவரோடு தொடர்பில் இருந்தாராம். அவர் பாதியிலேயே விட்டுட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ராஜாவுடன் சேர்ந்து கொண்டார் சுவாதி.

 

police

 

உல்லாசமாக ஊர் சுத்தவும் கஞ்சா இழுக்கவும் காசுவேணுமே.. அதுக்காகத் தான் திருட்டில் ஈடுபட்டோம் என்றுவிசாரணையில் கூறியுள்ளார் சுவாதி.

மேலும் பெண் காவல் அதிகாரி கூறுகையில், பெற்றோர்கள் நம்ம புள்ள நல்லா படிக்கட்டும்னு பட்டினத்திற்கு அனுப்பி வச்சா, இந்த புள்ள இப்படி கண்டமேனிக்கு சுத்துது. இதுல என்கிட்டேயே மேடம் எனக்கு ஒரு சிகரெட் வாங்கி கொடுங்க பிளீஸ்னு கெஞ்சுது. அந்த அளவுக்கு போதைக்கு அடிக்ட் ஆயிடுச்சு " என நம்மிடம் விவரித்தார்.

பெண் பிள்ளைகளை பெற்றவங்களே கொஞ்சம் கவனமா இருங்க.. அதுவும் பட்டிணத்திற்கு படிக்க அனுப்பி வைத்தால் மிகவும் கவனமாக இருங்கள்.  

 


 

Next Story

போதையில் நீ, வீதியில் குடும்பம் - போதைக்கு எதிராக பிஞ்சுகள் பேரணி..! (படங்கள்)

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

சர்தேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினமான இன்று, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சார்பில், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.