Skip to main content

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி- 34 பேர் தற்கொலை! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

2 lakh students fail Class 10 general examination - 34 commit suicide!

 

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

 

தேர்வில் 70.70% மாணவிகளும், 64.02% மாணவர்களும் வெற்றி பெற்றனர். மொத்தமாக 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். எனினும், 2 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளில் 34 பேர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம், ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்