Skip to main content

நீர்நிலைகளை பாதுகாக்க பியூஸ் மனுஷுடன் இணைந்தார் சிம்பு!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
simpu pysush

 

சமூக சேவகர் பியூஸ் மனுஸ், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும், தனிப்பட்ட முயற்சியில் காடுகளை உருவாக்கியும்  முன்னுதாரண மனிதராக திகழ்கிறார்.

இவர், ’சேலம் மக்கள் குழு’ அமைப்பை உருவாக்கி  அக்குழுவினருடன் சேலத்தில் பல்வேறு ஏரிகளை சீரமைத்திருக்கிறார். கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில்  அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார். சேலத்தில் இதுவரையில் மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி என 4 ஏரிகள்,  அரிசிப்பாளையம், பள்ளப்பட்டியில் 2 தெப்பக்குளங்களை  அழிவில் இருந்து மீட்டெடுத்து அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியுள்ளார்.

 

simbu1

 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் நடிகர் சிம்புவின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு அவரை தொடர்புகொண்டு,  தமிழகமெங்கிலும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து பேசினார் பியூஸ்.  சிம்புவின் அதற்கு சம்மதித்துள்ளார்.  இதையடுத்து, இன்று சேலத்தில் பியூஸ் மனுஷ் முயற்சியினால் சீரமைக்கப்பட்ட ஏரிகளை பார்வையிட்டார்.

 

 மூக்கனேரியில் இன்று நடிகர் பியூஸ் மனுஸுடன் பரிசலில் சென்று சுற்றுப்பார்த்தார் சிம்பு.  பரிசலில் சென்றபோது ஏரிகள் சீரமைப்கப்பட்டதன் விபரங்களை பியூஸிடம் கேட்டறிந்தார் சிம்பு.  இதே போல் சேலத்தில் உள்ள பல்வேறு ஏரிகளையும் பார்வையிட இருக்கிறார் சிம்பு.   இதே போல் சேலத்தில் நீண்ட நாள் பிரச்சனையாக இருக்கும் குப்பமேடு பகுதி்யையும் பார்வையிடுகிறார்.

 

simbu3

 

இது குறித்து நடிகர் சிம்பு,  ‘’மற்றவர்களை குறைசொல்லவதை விட்டுவிட்டு, நாம் எதாவது செய்யலாம் என்று பியூஸ்  சாரிடம் பேசினேன்.  மேலும், அவர் அழைத்ததின் காரணமாக சேலம் வந்துள்ளேன்.  ஏரிகளை பார்வையிட்டேன்.  இது சம்பந்தமாக அவரிடம் விரிவாக பேச உள்ளேன்.  அதன்பின்னர் அவருடான எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.

 

simbu2

 

இது நிகழ்வு குறித்து பியூஸ் மனுஷ்,  ‘’நீர் நிலைகளை பாதுகாத்து வரும்  வேலைகளை சிம்புவுக்கு காட்டியதில் மகிழ்ச்சி.   காவிரியை பாதுகாப்பது மற்றும் அதன் தேவை குறித்தும் விளக்கு கூறினேன்.  பலர், தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக பேசினார்கள்.  ஆனால், எதுவும் நடக்கவில்லை. சிம்பு பேசினார். பலர் அதை விமர்சித்து இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நல்ல மாற்றம் நிகழ்ந்தது.  நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதிருக்கிறது.  அதை உணர்ந்ததால் நம் பயணத்தில்  சிம்புவும் கலந்துகொண்டார்’’ என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.