Skip to main content

ஆளுநரை பதவிநீக்கம் செய்க! - குடியரசுத்தலைவருக்கு இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம் வலியுறுத்தல்!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
Banwarilal

 

 

 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர் பன்வாரிலாலை உடனடியாக பதவிநீக்கம் செய்ய, இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னரைக் குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் மீது கவர்னர் மாளிகை புகாரளித்தது. இதனடிப்படையில், கடந்த அக் 9-ஆம் தேதி காலை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியரை கைது செய்தது தனிப்படை போலீஸ். இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 

 

 

இந்தக் கைது நடவடிக்கையைக் குறித்து கண்டனம் தெரித்துள்ள இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீதான காவல்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கவர்னரின் செல்வாக்கில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நீதியரசர் கோபிநாதனின் செயல்பாடு மனநிறைவளிக்கிறது. ஒரு கட்டுரை எழுதியதற்காக அரசமைப்புச் சட்டம் 124 பதியப்படுவது இந்தியாவிலேயே மிகவும் அரிதான விஷயமாகும். பத்திரிகையாளர்கள் மீது நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீதியரசர் கோபிநாதனின் தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்திய நீதிமன்றங்களுக்கும் முன்மாதிரியான ஒன்றாக அமைந்திருக்கிறது. 

 

இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அதேபோல், அரசின் உத்தரவை ஏற்று கண்மூடித்தனமாக கைது மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாடு ஒரே தேர்தல்; குறைக்கப்படுகிறதா சட்டமன்ற ஆயுட்காலம்?

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Report recommendation for One Country One Election

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளது. 

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலுக்கு பிறகு, அனைத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம், அடுத்த மக்களவைத் தேர்தல் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தப்பட்ட பின், மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கும் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் தயாரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. 

தொங்கு சட்டசபை, அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆட்சி கவிழ்ந்தால் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும். மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு வேளை 2029ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படுமானால், 2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபைத் தேர்தலை எதிர்க்கொள்ளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 3 ஆண்டு வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story

'ஒரே நாடு ஒரே தேர்தல்'-18,626 பக்க அறிக்கை தாக்கல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
'One country one election'-18,626 page report filed

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவரிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்துள்ளது. அதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.