Skip to main content

பன்றிக்காய்ச்சல் மக்கள் பீதி அடைய வேண்டாம்- சுகாதாரத்துறை செயலர்....

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
radha krishnan


எழும்புர் குழந்தை நல மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் பலியானதை அடுத்து, அந்த மருத்துவமனைக்கு ஆய்வு நடத்த சென்ற தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 

” கடந்த ஆண்டை விட டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது. டெங்கு நோய் உறுதி செய்யப்படாதநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அச்சிறுவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நோயில் 98% பேர் குணமடைந்தாலும், 2% பேர் பாதிக்கப்படுகின்றனர்.” என்று கூறினார்.
 

மேலும், கொசு உற்பத்தியை தடுப்பது பெரும் சவாலாக இருக்கின்றது. பன்றிக்காய்ச்சல் பருவகால நோய் என்பதால் மக்கல் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். இந்த நோயை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மக்கள் எதேனும் சந்தேகம் இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். பன்றிக்காய்ச்சலை வெகு விரைவாக கண்டறியும் எலிசா கருவிகள் அரசு மருத்துவமனிகளிலேயே இருக்கிறது. அதனால், மக்கள் தாங்களாகவே மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 
 

இந்த நோயை ஒழிக்க நீரில் கவனம் செலுத்த வேண்டும் என்றும். கர்ப்பிணிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பெங்களூருவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், தமிழகத்தில் இது பல இடங்களில் ஒருசிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் இது நன்கு பரவக்கூடும் என்பதால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

''இப்படி திரியும் மாட்டின் பாலைத்தான் சில ஹோட்டல்களில் வாங்குகிறார்கள்'' - அதிருப்தி தெரிவித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் பள்ளிச்சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சாலையில்  நடந்து சென்றபோது, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சிறுமியை முட்டி தூக்கி வீசியது. மாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறுமியை மாடுகள் கடுமையாகத் தாக்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, மாட்டை விரட்டி சிறுமியைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது வெளியில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாடுகளைத் திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது'' என தெரிவித்திருந்தார்.

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

தொடர்ந்து பொது இடங்களில் அலட்சியமாக மாடுகள் சுற்றித் திரிவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சாக்கடை பகுதியில் நீரில் இறங்கியபடி நின்ற மாட்டை சுட்டிக்காட்டி அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''இதுபோன்று திரிகின்ற மாட்டின் நிலைமையைப் பாருங்கள். சாக்கடைக்குள் நின்று கொண்டு அந்த நீரை குடிக்கிறது. இதிலிருந்து வரக்கூடிய பாலை இன்னமும் ஹோட்டல்கள் வாங்குகிறார்கள். தனி நபர்கள் எல்லாம் கறந்த பாலை வாங்குகிறோம் என்று தவறுதலான போக்கில் நடந்து வருகிறார்கள். நாம் வளர்ந்த நகரம் என்று வேற சொல்கிறோம். மாட்டிற்கும், கன்றுகுட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது. அதை சரியாக பராமரித்து வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதை பொதுமக்களும், மாட்டை வளர்ப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 Radhakrishnan, IAS expressed his displeasure, "They only buy milk from stray cows in hotels"

 

விதண்டாவாதம் செய்து பேருந்தில் விபத்து ஏற்படுவதால் பேருந்து சேவையை நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுப்புவது போல் பேசக்கூடாது. மாடுகளை சரியான கொட்டகையில் அடைக்க வேண்டும்; சரியான தீனி போட வேண்டும். அப்படி இல்லாமல் இப்படி தெருவில் விட்டால் எப்படி. அதேபோல் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து இப்படி தெருவோரத்தில் போட்டு விடுகிறார்கள். இதனை அகற்றுவது மாநகராட்சியின் வேலையா? 18 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்கு 70 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நபரும் 500 கிராம் குப்பையை போட்டால் 6100 மெட்ரிக் டன் குப்பையை தினமும் நாம் அள்ளிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நிறைய பேர் சொல்வது நியாயமான கருத்துகள் தான். ஆனால் அதே நேரத்தில் நாம் வளரும் மாநகரம். உலக அளவில் வளர வேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

 

 

 

 

Next Story

''அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை'' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேட்டி

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

nn

 

நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

இன்று மதுரை மாவட்டம் கோச்சடையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இலக்கோ அல்லது நியாய விலை அல்லாத பொருட்களையோ விநியோகிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். மீண்டும் இதை உங்கள் முன்னால் தெளிவுபடுத்தி விடுகிறேன்'' என்றார்.