Skip to main content

ஆண்களை ஏமாற்றாதீர்கள்: மகளிர் தினவிழாவில் பிரேமலதா விஜயகாந்த்!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018


தேமுதிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
 

பெண் தொண்டர்கள் தான் தேமுதிகவின் பலம். இரண்டு ஆண்ட கட்சிகளுக்கு இணையான கட்சி தேமுதிக. லஞ்சம் மற்றும் வசூலில் தான் எடப்பாடி ஆட்சி நடக்கிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு கட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். 
 

ஒரு முறை தோல்வி அடைந்து விட்டதால் கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. நாங்கள் கலைஞர், ஜெ. நல்ல உடல்நிலை இருக்கும் போதே அவர்களை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள். தேர்தல் வந்தால் தேமுதிக யார் என நிருபிப்போம். களத்தில் உங்களை சந்திக்கிறோம். 
 

தினம் ஒரு கட்சிகள் முளைக்கிறது அவை எல்லாம் காணாமல் போகும். பெண்களில் ஹாசினி, லாவன்யா, உஷா என இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோம். எடுபிடி எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வழிப்பறி, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. காவல் துறையை சேர்ந்த காமராஜ் என்பவர் அந்த துறைக்கே இழுக்கை ஏற்படுத்திருக்கிறார். காவல் துறை காவு வாங்கும் துறையாக தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. 

 

Premalatha


 

உஷா அவர்களை துரத்திய அந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் தலை கவசம் அணியாமல் சென்றது ஏன்? தீவிரவாதிகள், கொலை செய்தவர்கள் நடமாட அனுமதிக்கும் போது தலை கவசம் அணியாமல் போனது குற்றமா? காவல் துறையை மக்கள் ஏளனமாகப் பார்க்கிற நிலைமை இருக்கிறது. தலைகவசத்திற்கு மக்களை துன்புறுத்துகிறார்கள். 
 

ஒரு மாசத்துக்கு ஒரு கோடி வசூல் செய்ய டிஎஸ்பிக்களுக்கு தலை கவசத்துக்காக டார்கெட் கொடுத்த ஆட்சி எடப்பாடி கொடுத்திருக்கிறது. பெண்கள் காதலிக்க தைரியம் இருக்கும் போது அவர்களையே கரம் பிடிக்கும் போது தைரியமாக கரம் வாழ்ந்து காட்டுங்கள். ஆண்களை ஏமாற்றாதீர்கள் என கூறினார். 
 

விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி வருவார் தேர்தல் நேரத்தில் அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பாருங்கள். தேமுதிகவுக்கு காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எந்த லட்சியத்துக்காக கட்சி ஆரம்பித்ததோ அந்த இலக்கை அடையும் வரை பின்வாங்க மாட்டோம்.
 

அனைவரும் தலை கவசம் அணிய வேண்டும். ஒரு சட்டம் இயற்றினால் தொடர்ந்து அதை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என நீதி துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன். 
 

ஆட்சியைச் சேர்ந்தவர்களே உங்களால் முடியாது என்றால் ராஜினாமா செய்யுங்கள் . தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி பேச எந்த தலைவருக்கும் தகுதி இல்லை என்றார். அய்யாக்கண்ணு அவர்களை பெண் அறைந்தார். செருப்பை தூக்கி காட்டினார். அவரை அடிக்கிற அதிகாரத்தை யார் கொடுத்தது. ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுத்தாக வேண்டும். திருச்செந்தூர் விவகாரத்தில் பெண்ணின் செயல் கண்டிக்கத் தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. எப்போது முடியும். கேப்டன் விஜயகாந்த் வந்தால் தான் முடியும் என மக்கள் கூறுகிறார்கள். 
 

Premalatha


 

தண்ணீர் ஏன் நாம் அண்டை மாநிலங்களிடம் கை ஏந்த வேண்டும். நாமே சேமிக்கலாமே. அந்த ஆட்சியாளர்கள் தகுதி இல்லாதவர்கள். கால்வாய் , நீர்வரும் வழியில் தூர் வார வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தரவில்லை. இரு கட்சிகளும் பொய் சொல்ல கற்றுக் கொண்டன. உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கும் வரை ஆட்சி இருக்குமா என்றே தெரியவில்லை எனத் தெரிவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். மோடி அவர்கள் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என வரிகளால் வலி மிக்க மக்கள் தான் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் கேப்டன் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும்.
 

குட்டி கதை ஒன்றை சொல்கிறேன். 
 

மாபெரும் குருவிடம் ஒரு பிச்சைகாரர் பிச்சை கேட்ட போது அந்த குரு பிச்சையாக ஒரு போர்டு கொடுத்தார். அதை வைத்தே மூன்று தலைமுறையாக பிழைத்தார். மூன்றாம் தலைமுறை கடந்து மீண்டும் அதே மகானிடம் பிச்சை கேட்ட போது அந்த மகான், தான் கொடுத்த பிச்சை போர்டை திரும்ப வாங்கி கொண்டார். வாங்காதீர்கள் அந்த போர்டு ராசியானது என பிச்சை வாங்கியவர் கூறினார். 
 

ஆனால் மகான், நான் உன்னிடம் கொடுத்த ஓடு தங்கத்தால் செய்யப் பட்டது இருந்தும் அதை வைத்து பிழைக்க தெரியவில்லை என கூறினார். இந்த கதையில் வரும் ஓடு என்பது ஓட்டு என்கிற ஆயுதம் அது மக்களிடம் இருந்தும் ஆட்சியாளர்களிடம் மக்கள் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். வரப் போகும் தேர்தலிலாவது நியாயமான, தைரியமான, மக்களுக்கான ஆட்சியை அமைக்க தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்க மாற்றத்தை கொண்டு வர கேட்டுக் கொண்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'14+1 தரும் கட்சியுடன் தான் கூட்டணி' - பிரேமலதா விஜயகாந்த்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'Alliance only with the party that gives 14+1' - Interview with DMUDHIKA Premalatha Vijayakanth

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிகவின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். அதையெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்'' என்றார்.

Next Story

“விஜயகாந்த் இதை உணர்ந்துவிட்டால் அவர் பழையபடி வருவார்” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

“If Vijaykanth realizes this he will come back to his old self” – Premalatha Vijaykanth

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக கட்சிசியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. திமுக அரசு நூல் விலையை கட்டுப்படுத்தவில்லை. டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை. பால்விலை, சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் 21 அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். லஞ்சம், ஊழல் செய்து கோடிக் கோடியாக கொள்ளை அடித்த பணம். இன்று தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுக்கிறார்களே அதை வாங்கிக் கொள்ளுங்கள். மூக்குத்தி, கம்மல், கால் கொலுசு என்ன? எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். செயின் கொடு, வளையல் கொடு என பெண்கள் கேளுங்கள். இன்று தங்கம் விலை எங்கோ ஏறிவிட்டது. வந்த உடன் தங்க நகை கடன் தள்ளுபடி என சொன்னார்களே. செய்தார்களா. இருக்க இருக்க தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தாலிக்குத் தங்கம் என சொன்ன திட்டத்தையும் முடக்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லை. அனைத்து நல்லத் திட்டங்களையும் நிறுத்தி மக்களை வஞ்சிக்கக் கூடிய ஆட்சி நடக்கிறது.

 

ஈரோடு கிழக்கில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜய்காந்த்திற்கு தைரியம் வரும். என் மக்கள் என்னை கைவிடவில்லை. என் மக்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்ற தெம்பும் தைரியமும் விஜய்காந்த்திற்கு வந்து அதை அவர் உணர்ந்தால் பழையபடி விஜய்காந்த்தை நீங்கள் பார்ப்பீர்கள்” எனக் கூறினார்.