Skip to main content

ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார்: துபாய் தடயவியல் போலீசார்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018


 

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். இன்று மாலை அல்லது நாளை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அம்பானிக்கு சொந்தமான தனி விமானம் ஒன்று துபாய் விரைந்துள்ளது. 
 

இந்த நிலையில் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடம் தடயவியல் சான்று ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையில்; ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் இருந்த போது மூழ்கியதால் இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்ற நோக்கமோ, கிரிமினல் குற்றமோ இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்