Skip to main content

குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்களைப் பார்த்துக்கொள்வதில்லை -வழியெல்லாம் வாழ்வோம் #12

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

இந்த சமுதாயம் தன்னில் சரிபாதி அளவு கொண்டுள்ள ஓர் இனம்பெண்ணினம். ஆனால் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண் எனும் அத்தனை நிலைகளிலும் உடலாலும்மனதாலும் பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாக்கப்படும்  இனம் பெண்ணினம் மட்டுமே. 

 

vazhiyellam vaazhvom

 

 

 

பெண்களின் உடலியியல் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் காரணமாவது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகளே என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது. தன்குடும்பம், வேலை  செய்யும் இடம், சமூகம் என அனைத்தையும் பேணத் தெறிந்த பெண்கள், தங்கள் உடல்நிலையைக் கவனிப்பதுகூட இல்லை. வீடு, ஊர், உலகத்துக்கே அன்னமிடும் இவர்கள் தமக்கான உணவை சரியான நேரத்தில் உட்கொள்வதில்லை. முறையான உடற்பயிற்சிகளும்  மேற்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நேரமின்மை என்பது. பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் பெண்களின் ஓய்வெடுக்கும் நேரம் மிகமிகக் குறைவு. இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கும் உடல்நலக்கோளாறுகள் அதிகம். 

பெண்களின் உடல் சார்ந்த பொதுவான பிரச்சனைகள்:

1. ஊட்டச் சத்தின்மை 

2. உடல் எடை சார்ந்த பிரச்சனைகள் 

3. உறக்கமின்மை இன்னபிற….

ஆனால் மேற்குறிப்பிட்ட இவையாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாகவே உள்ளன.  பெண்களுக்கான எல்லாப் பிரச்சனைகளுக்குமான அடித்தளம் ஊட்டச்சத்து குறைபாட்டிலேயே தொடங்குகிறது.எனவே, முதலில் ஊட்டச்சத்துக்கள் பற்றிய பொதுவான தகவல்களை அலசுவோம்.

ஊட்டச்சத்து:

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும்,  பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும்  காரணமாக இருக்கின்றன. இந்த வேதிவினைகளை ஊக்குவிக்கும் சத்துக்களே ஊட்டச்சத்துக்கள். சுருங்கச் சொன்னால் மனித உடலின் அடிப்படைத் தேவைகளான வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பவையே ஊட்டச்சத்துக்கள் ஆகும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற யாவும் ஊட்டச்சத்துக்களே. இவற்றுள் அடிக்கடி பொதுவில் பேசப்படும் ஒன்று வைட்டமின்கள்.

 

vitamins

 

 

 

வைட்டமின்கள்:

வைட்டமின்களின் குறைபாடு பல விதத்திலும் நம் அன்றாட வாழ்வைஅதீதமாய்ப் பாதிக்கின்றனபெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதைமாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு  எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதைமாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது. வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அதுபோல நமதுஉடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறன் நம்மனித  உடலுக்கு இல்லை. வேறு சில  உயிரினங்களுக்கு  அந்த திறன் இருக்கிறது. நமது உடலில் செல்களுக்கும், உறுப்புக்களுக்கும் ஊட்டம்அளிப்பதோடு மட்டுமல்லாமல்  வைட்டமின்கள் ஹார்மோன் சுரப்பிற்கும், கண்பார்வைக்கும், என்சைம்கள் சுரப்பதற்கும் அவசியமாகின்றன. 

புரதங்கள்:

அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால்இணைக்கப்பட்ட சேர்மம் புரதம்  எனப்படும் புரோட்டின் ஆகும். புரதம்  உடல்வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும்  அவசியம். செரிமானத்தின்போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது.  புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன. நல்லசக்தி அளிக்கும்.  கார்போஹைடிரேட் இல்லாத சமயத்தில் புரத சக்தியை உடல்எடுத்துக் கொள்ளும். என்சைம்கள்  எனப்படும் புரதங்கள் உடலின் வேதியியல்மாற்றங்களுக்கு உதவுகின்றன. புரதத்தின் ஒரு  வகையான ஹீமோகுளோபின்கள் தான் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்கின்றன.

 

vazhiyellam vaazhvom

 

 

 

கார்போஹைடிரேட்:

மனித இனத்திற்கு கார்போஹைடிரேட் தான் எளிதில் சக்தி கொடுக்கும் உணவு. மனித உடலுக்கான எரிபொருளாக (Fuel)  கார்போஹைடிரேட்டை கொள்ளலாம். புரதத்திலிருந்தும் கொழுப்பிலிருந்தும் நமக்கு சக்தி கிடைத்தாலும், மூளைக்கான சக்தி பெற கார்போஹைடிரேட் அவசியம். மூளையின் செயல்திறனுக்கு, ‘குளூகோஸ்’ சத்து அவசியம். நியூரான் அமைப்புகளால் கொழுப்பை எரித்து சக்தி எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் புரதம், கொழுப்பு இவற்றை செரிப்பதற்கு அதிக நீர் சக்தி தேவைப்படும். ஆனால், கார்போஹைடிரேட்டை செரிக்க அந்த அளவு நீர் தேவைப்படாது. கார்போஹைடிரேட் நமது ஜீரண பாதையில் உடைந்து குளுகோஸாக ரத்தத்தில் கலக்கிறது. இந்த குளூகோஸ்தான் சக்தியாக மூளை, தசை மற்றும் அனைத்து திசுக்களாலும் எடுத்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கார்போஹைடிரேட்டின் அளவு சரியாக இருத்தல் நலம். அவை கூடினாலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.

தாதுப்பொருட்கள்:

பல்வேறு வகையான தாதுப்பொருட்கள் இருந்தாலும், அவற்றுள் முக்கியமானவை  இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்றவையாகும்.  இரத்தப்புரதத்தை உண்டாக்க இரும்பு  தேவைப்படுகிறது. இந்தியா உட்பட பலநாடுகளில் இரும்புச் சத்துக் குறைவே இரத்தச் சோகை நோய்க்குப்  பரவலான காரணமாகும். இரத்தப்புரதத்தை உண்டாக்க இரும்பு தேவைப்படுகிறது.  இதுபோலவே அயோடின் குறைவால் முன்கழுத்துக் கழலை, தைராயிடுசுரப்புக் குறை, அங்கக்கோணல், உளநிலை மந்தம் போன்ற பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வளரூக்கிகள், நொதிமங்கள் எனப்படும் என்சைம்களின் சரியான வினையாற்றலுக்கு துத்தநாகம் பயன்படுகிறது. துத்தநாகச் சத்துகுறையும் போது உடல் வளர்ச்சி குன்றிப் போகிறது. மேலும்  சுவை மற்றும்மணமறி உணர்வான்களும் சேதப்படுகின்றன.

 

 

"மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்பது உணவுக்கு மட்டும் பொதுவாக சொல்லப்பட்டதன்று. இத்தகைய ஊட்டச்சத்துக்களும் அதுபொருந்தும்.

இனிவரும் வழியெல்லாம் வாழ்வோம் தொடரின் பாகங்களில்இத்தகைய ஊட்டச்சத்துக்கள்  எங்ஙனம் பெண்களின் உடல் சார்ந்தவலிமைக்கும், குறைபாடுகளுக்கும் காரணமாகின்றன என்று விரிவாகக் காண்போம்.

 

முந்தைய கட்டுரையை படிக்க:

 

vazhiyellam vaazhvom

 

 

 

 

 

 

 

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.