Skip to main content

தமிழ்நாட்டில் 3.10 லட்சம் எழுதப்படிக்க தெரியாதவர்கள்! பாடம் சொல்லிக் கொடுக்க வந்தாச்சு புதிய திட்டம்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

TAMILNADU PEOPLES NOT LEARN WRITTEN KNOWLEDGE SURVEY REPORT

 

 

ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி, கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்போது இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த எழுதப்படிக்க தெரியாதவர்களின் புள்ளி விவரம் என்பதும்கூட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பழையது.

 

தமிழகத்தில்,1990- களில் அறிவொளி என்ற பெயரில் எழுத்தறிவு இயக்கம் செயல்பட்டு வந்தது. அறிவொளி இயக்கத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 'சச்சார் பாரத்' என்ற பெயரில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இப்போது பாஜக ஆட்சியில் மீண்டும் அத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என பெயரிடப்பட்டு உள்ளது.

 

இந்த புதிய எழுத்தறிவு இயக்கத்தின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட, கொஞ்சமும் எழுதப்படிக்க தெரியாத மக்களுக்கு அடிப்படை கற்றல் பயிற்சி அளிப்பதுதான் நோக்கம். தன்னார்வலர்கள் மூலம் இத்திட்டத்தில் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''புதிய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், எழுதப்படிக்க தெரியாத மக்களுக்கு ஆண்டுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகின்றன. அதன்படி மே முதல் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை என மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். 

 

கற்றல் பயிற்சிக்கு வரும் மக்களின் விருப்பத்திற்கேற்ப பயிற்சி வகுப்புக்கான நேரம் ஒதுக்கப்படும். தினமும் 2 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மொத்தம் 120 மணி நேரத்திற்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

 

பயிற்சி அளிக்கும் தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது வட்டார அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இத்திட்டத்தில் பணியாற்ற 1200 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நவ. 30- ஆம் தேதி முதல் கற்றல், கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன,'' என்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள். பயிற்சி முடிவில் வாய்மொழி மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.