Skip to main content

அரசியல் காரணம் தவிர்த்து பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என்ன???

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

பெட்ரோல் விலை இனி தினமும் மாற்றியமைக்கப்படும் 2017 ஜூனில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தேர்தலின்போது மட்டும் எந்த மாற்றமுமில்லாமல் இருந்தது, அதன்பின் 15 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசியல் காரணம் ஆயிரம் உண்டு. எனினும் நாம் இப்போது அரசியல் காரணங்களை விடுத்து மற்ற எந்தெந்த காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதைப் பார்ப்போம்.

 

petrol


 

 

 

கச்சா எண்ணெய் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டால்  அது நேரடியாக விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெட்ரோலின் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருப்பது கச்சா எண்ணெய் விலைதான். சர்வதேச அளவில் பெட்ரோலின் தேவை அதிகரிக்கும்போதும், குறைவான உற்பத்தியின்போதும், விலை உயரும்.

 

அரசியல் காரணிகள்:
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டிற்கும், கொள்முதல் செய்யும் நாட்டிற்குமிடையே அரசியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது உலகம் முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு சிறு மாற்றத்தை கொண்டுவரும்.

 

 

 

தேவை அதிகரிப்பு:
தற்போதைய இந்தியாவின் நிலை பெட்ரோல் மற்றும் ஏனைய எரிபொருள்கள் தேவையை அதிகரிக்க செய்கிறது. எடுத்துக்காட்டாக சொந்தமாக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் பெட்ரோல் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற தேவைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஒரு பொருள் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டால், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் மக்கள் அதனை வாங்க முற்படுவர். அதுவும் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

 

சரியான விநியோகம் செய்யாதது மற்றும் தேவை:
கச்சா எண்ணெய்யின் விலையால் இந்தியாவின் முழு தேவைக்குமான எண்ணெயை, எண்ணெய் நிறுவனங்களால் வாங்க இயலாது. அதனாலும் இங்கு ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும் இதுவும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது இல்லாமல், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும், சந்தை நிறுவனங்களும் கச்சா எண்ணெய்யை 6 வாரங்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களை இருப்பு வைத்திருக்கும், இதுவும் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

 

 

வரி:
மாநில அரசாங்கத்தின் வரிகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோலிய பொருட்களின் விலை மாறுபடும். இந்திய அரசாங்கம் எப்பொழுது அதிக வரியை பெட்ரோலியத்துக்கு நிர்ணயித்ததோ, அப்பொழுதே நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காகவும், இழப்பை சரி செய்யவும் விலையை உயர்த்த தொடங்கிவிட்டன.

 

ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம்:
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் ஏற்படும் மாற்றம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

போக்குவரத்து செலவுகள்:
அந்தந்த ஊர்களுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர ஆகும் செலவுகளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.    

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.