Skip to main content

மீண்டும் உடைகிறது தேமுதிக - கட்சி நிர்வாகிகள் பரபரப்பு...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019
vijay kanth


நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டணி சம்மந்தமாக ஆலோசனை நடத்தப்படும் என அறிவித்துவிட்டு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டனி ஏற்படுத்தப்பட வேண்டியதை பற்றி கட்சியின் நிர்வாகிகள் சிலர் பேசினார்கள். அந்த கூட்டத்தில் ஏழு பேர் மட்டுமே பேசினார்கள். மாவட்டச் செயலாளர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. 
 

இந்த பின்னணியில்தான் இன்று கட்சியினுடைய துணை செயலாளர் கேப்டனின் மைத்துனர் சுதீஸ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டும், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேசி ஒரு வழியாக அதிமுக கூட்டணிதான் என முடிவு செய்துவிட்டார்கள். இதில் பாமகவை விட குறைவான தொகுதியை பெறுவதற்கும் ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் இதற்கு முன்பு எங்களிடம் பேசிய கேப்டனின் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த உத்தரவாதம் பாமகவை விட கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுதான் கூட்டணியை இணையப்போகிறோம் என கூறினார்கள். ஆனால், இப்போது குறைவான இடங்களை பெற்றதோடு தேமுதிக பலவினமாகிவிட்டது என்பதை எங்கள் கட்சியின் தலைமையே சொல்லாமல் சொல்லிவிட்டது. 
 

இந்த நிலையில், எங்கள் கட்சியின் தலைமைக்கு என்ன தேவையோ அதை அதிமுக மற்றும் பாஜகவிடம் பெற்றுவிட்டார்கள். ஆக, கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஒட்டுமொத்தமாக கேப்டனின் குடும்பத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் கேப்டனின் புகழ்பாடிக்கொண்டு அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் எங்கள் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து இழக்க வேண்டுமா என பல மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுக்க தொலைபேசி வழியாக ஆதங்கத்தை பேசி வருகிறார்கள். குறிப்பிட்ட மூன்று நிர்வாகிகள் தலைமையில் அக்கட்சியிலுள்ள பல்வேறு நிர்வாகிகள் தனியாக பிரிந்துவந்து, தனி அணியாக அறிவிக்க உள்ளார்கள். ஆக, சென்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந சந்திரக்குமார் தலைமையில் தேமுதிக உடைந்து எப்படி தனி அணியாக மாறியதோ அதேபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக மற்றுமொரு பிளவை சந்திக்க உள்ளது. அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புகளில் தேமுதிக பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.