Skip to main content

சபரிமலை 27 வருட வழக்குப் பாதை மற்றும் தீர்ப்பு... 

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

1991-ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஒரு வழக்கு, உரிமைப் போராட்டம் என்றும் கூட சொல்லலாம். பொதுவுடைமையாக கொண்டாடப்பட வேண்டிய கடவுளை, குறிப்பிட்ட வயது (10 முதல் 50) பெண்களை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு தனிஉடைமையின் வழிபாட்டில் இருந்தது.

 

ss

 

 

27 வருடங்களாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதா வேண்டாமா என்று வழக்கு நடந்துவந்தது. இதில் ஒவ்வொரு முறையும் கேரளாவில் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போதும், அவர்களின் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லிவந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை தகர்க்க யார் வழக்குத்தொடுத்தது, இந்த வழக்கு விசாரணையின்போது கிளம்பிய ஒரு நடிகையின் பரபரப்பு அறிக்கை, அதன் பின் கேரள அரசின் நிலைப்பாடுகள், இந்த வழக்கில் இளம் வழக்கறிஞர்களின் பங்கு என்ன என்பதை எல்லாம் பார்ப்போம்.

 

1991-ல் முதல் முறையாக எஸ். மஹாதேவன் என்பவர் சபரிமலை தரிசனத்திற்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த வழக்கை கேரளா உய்ரநீதிமன்றம் தள்ளுபடி செய்து, 10-50 வயது பெண்கள் செல்ல இந்து மத நம்பிக்கை மற்றும் சபரிமலை தேவஸ்தானம் விதி படி தடை என்று அறிவித்து.

 

2006-ல் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்னும் சாமியார் சபரிமலை கோவிலில் பூஜை நடத்தினார், அந்தப் பூஜையின் முடிவில் இதற்குமுன்பு வயதுவந்தப் பெண் யாரோ ஒருவர் கோவிலுக்குள் வந்துசென்று இருக்கிறார் அதற்கான அறிகுறியிருக்கிறது என்று கூறினார்.

 

சில மாதங்கள் கழித்து கன்னட நடிகை ஜெயமாலா "1986-ஆம் ஆண்டு எனக்கு 26 வயதாக இருக்கும்போது சபரிமலை கோவிலுக்குள் சென்றேன், அப்போது கூட்டநெரிசல் காரணத்தால் ஐயப்பன் விக்கிரதைத் தொட்டேன்" என்று கூறினார்.

 


2006-ல் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கைதொடுத்தது.

 

2007-ல் கேரளாவின் இடது ஜனநாயக கூட்டணி அரசு சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.

 

2006-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, இரண்டு வருடங்கள் கழித்து 2008-ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது.

 

அதன் பின் சில வருடங்களாக இந்த வழக்கு, விசாரணைக்கு வராமல் இருந்தது. இதற்கிடையில் 2015-ஆம் ஆண்டு மாதவிடாய் அறியும் கருவி கண்டுபிடித்த பிறகே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது.

 

2016-ல் சபரிமலை விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது என்று அப்போதைய கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார்.

 

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகளான நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதே வருடம் பெண்கள் சபரிமலைக்கு வரும்போது தங்கள் வயதுக்கான ஆதாரங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தேவசம் போர்டு அறிவித்தது.

 

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றம் 'கடவுள் வழிபாட்டில் இரட்டைமுறை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் கடவுள் வழிபாட்டில் ஆணும் பெண்ணும் சமம் மேலும் மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுப்பது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டதின் 14-ஆம் பிரிவை மீறுவதாக உள்ளது' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். மேலும் சபரிமலை கோவிலில் பெண்களுக்கும் அனுமதி என்று 4:1 என்ற கணக்கின்படி தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் இந்த தீர்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.