Skip to main content

ஐ.சி.யூ.-இல் ஆதித்தமிழரின் தோல் பாவை கூத்து; உயிரூட்டப்படுமா?

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

street drama life

 

‘தந்தான தான... தந்தான தான...’ ‘ஏலேலோ ஏலேலோ ஐலசா...’ என்று சந்தோசத்தையும் ‘கஞ்சிக்கலயம் சொமந்து கரைமேல வாரபுள்ள கண்ணுல வெள்ளமென்ன சொல்லடியாத்தா’ என்று துக்கத்தையும் நாற்று நடும்போதும் களை பறித்தலின் போதும், தெம்மாங்கு பாட்டால் வெளிப்படுத்தி நம் ஆதிகாலத் தமிழர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்வர். இன்றைய மலிவு மகிழ்ச்சி சாதனங்களான டி.வி., ரேடியோ, டிஜிட்டல் யுகமல்ல அக்காலம். பொழுதுபோக்கு அம்சம் என்னவென்று வார்த்தைகளே அறியாத காலத்தில், தங்களின் களைப்பை போக்க, உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை ஏற்றிக் கொள்ள தெம்மாங்கும் தெருப்பாடல்களுமே வடிகாலாய் இருந்தன.

 

காலப்போக்கில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர்கள் வேலைப்பளுவின் உடல் சோர்வைக் களைய அந்திமயங்கும் வேளையில் கிராமத்து தெருக்களில் ஆடல் பாடல் தெம்மாங்குகளை பொம்மலாட்டம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். படுதா போன்று கட்டிய திரைச்சீலையின் பின்னே கயிறுகளால் கட்டப்பட்ட மரப்பொம்மைகளை இயக்கி ஆட வைப்பதும், ஓடவைத்து அதற்கு பின்னணியாக பாவைக் கூத்துக்களைப் பாடி மக்களை களிப்புறச் செய்வார்கள் பொம்மலாட்டக் கலைஞர்கள். ஆலையில்லாத ஊரில் இதுப்பைப் ’பூ’ சர்க்கரை என்பதைப் போன்று நிழற்பட அரங்கம் (சினிமா தியேட்டர்) இல்லாத காலத்தில் இந்தப் பொம்மலாட்டக் கலையே மக்களுக்குப் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது.

 

street drama life

 

இதையடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கூத்துக் கலைஞர்கள் கதாபாத்திரங்களை தோலில் வரைந்து காட்சிப்படுத்தி வாடிய மக்களைக் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். அதன் மூலம், ராமாயாணம், மகாபாரதக் கதைகளை பின்னணியாக ஏற்ற இறக்கத்தோடு பேசி நடத்திய தோல்பாவைக் கூத்திற்கு ஆதிகால மக்களிடம் நல்ல வரவேற்பிருந்திருக்கிறது. காலப்போக்கில் இந்தக் கிராமிய தோல் பாவை கூத்திற்கு நல்ல வரவேற்பிருந்ததால் கிராமங்கள் தோறும் தோல் பாவை கூத்துக்கள் அந்தி நேரத்தில் அமர்க்களப்பட்டன.

 

பழமையான கூத்து என்றாலும், இயற்கை மணம் மாறாமலிருக்கும் இந்தக் கலையை சினிமா, தொலைக்காட்சி, வளர்ச்சியையும் தாண்டிய டிஜிட்டல் யுகம், தோல் பாவைக் கூத்துக்களை ஓரங்கட்டினாலும், 60 ஆண்டுகளுக்குப் பின்பும் தோல் பாவை கூத்து மறையாமல் இன்றளவும் கிராமப்புறங்களின் ஓரங்களில் நடைபெற்று வருவது தமிழனின் கலைகள் மண்ணுக்குள் செல்லவில்லை என்பதற்கு சாட்சியாக நிற்கிறது.

 

street drama life

 

மக்களின் ரசனைகள் கைவிட்டாலும், ஆதித் தமிழர்களான தங்களின் முன்னோர்களின் தோல்பாவைக் கூத்துக் கலையை தன் குடும்பத்தார் சகிதம் 50 வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிற தோல் பாவை கூத்து கலைஞரான ராஜூவின் வயது 74. சுமார் 20 கலைக் குடும்பங்கள் நெல்லையில் வசித்தாலும், இன்றளவும் அதற்கு உயிரூட்டும் வகையில் வருமானமில்லா விட்டாலும், கிடைத்தது போதும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று தோல் பாவை கூத்தை நடத்தி வருகிற ராஜூ கலை ஆர்வம் மங்காமல் சொன்ன கூத்தின் காட்சி அமைப்பு சிரமங்கள், அதற்காகப் பட்ட பாடுகள் புருவங்களை உயர வைக்கின்றன.

 

ஆட்டின் தோலைப் பதப்படுத்தி ரோமங்கள், கொழுப்புகளை அகற்றிய பின் அதைக் காயவைத்து, அவுரி இலை, முள் கற்றாழை, கள்ளிப்பால் போன்றவற்றின் கலவையால் வரும் வர்ணங்களைக் கொண்டு நாங்களே கதாபாத்திரங்களின் ஓவியங்களை வரைகிறோம். இந்த தோல் பாவைகள் அழியாது கிழியாது. ராமாயணம், மகாபாரதம், நல்லத்தங்காள், அரிச்சந்திரா போன்ற இதிகாசப் புராணங்களின் கதைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு என்பதால் அந்தக் கதாபாத்திரங்களை வரைவோம். 150 ஆண்டுகால பழமையான பாவைகளைக் கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பாவைகள் எங்களிடமிருக்கு. பெரிய மொடாவில் விளக்கெண்ணெய் ஊற்றி திரிவைத்து தீபமேற்றி, அந்த வெளிச்சத்தின் பின்னே தோல் திரையைக் கட்டி கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்துவோம். அதன் பின் பெட்ரோமாக்ஸ் விளக்கு, பயன்பாட்டுக்குப் பின் இப்ப 100 வாட்ஸ் 500 வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தி தோல் பாவைக் கூத்து நடத்துகிறோம்.

 

street drama life

 

இதில் மக்களுக்கு வெகுவாகப் பிடித்த ராமாயணம், நல்லத்தங்காள், அரிச்சந்திரன் மயான காண்டம் போன்ற கதைகளை காட்சிப்படுத்தி வழக்கமான பின்னணியாக ஹார்மோர்னியம், தவில் போன்றவைகளை பாடல் வசனங்களுக்கு ஏற்ப இசையமைத்து வாசிப்போம். பாவைகளைக் காட்சிப்படுத்தும்போது அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப குரலை மாற்றிப் பேசுவோம். முக்கியமா நல்லத்தங்காள் கதை அடுத்து நாட்டை இழந்த அரிச்சந்திர மகாராசா மயானம் காப்பார். மயான காண்டத்தில், அவர் மனைவி சந்திரமதி மகன் லோகிதாசன் உடலை மயானம் கொண்டு வருகையில், அரிச்சந்திரனுக்கும், சந்திரமதிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் போராட்டங்களை பாவைக் காட்சிகளோடு பின்னணி இசைக்குரலுடன் காட்சிப்படுத்துகிறபோது காட்சியைக் காணும் பெண்கள் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு. அப்படி ஒரு வரவேற்பு மக்களிடம்.

 

இப்ப காலத்திற்கேற்ப பாணியை மாற்றியும் உள்ளோம். மகனை பள்ளிக்கு அனுப்ப கதியற்ற தந்தை அவனை வேலைக்கு அனுப்புகிறார் இதையறிந்த பள்ளி தலைமையாசியார் அவனை பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைக்கிறார். நல்லா படிச்ச அந்த மாணவன் டாக்டராகிவிடுகிறான். மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் செய்யும் அந்த டாக்டர் மாணவன் பிரசவ வைத்தியத்திலும் முன்னேறிவிடுகிறான். இப்படி காலத்திற்கேற்ப பாவைகளைக் காட்சிப்படுத்துவதிலும் வரவேற்பிருக்கு. ஆனா என்னதான் முன்னோர்களின் கலையை ஐந்து தலைமுறையாக நாங்கள் நடத்தி வந்தாலும் குடியிருக்க வீடின்றி ஒண்டி வருகிறோம். தமிழகம் முழுக்க பட்டி தொட்டியெல்லாம் தோல் பாவை கூத்து நடத்தி வந்தாலும், போதுமான வருமானமில்ல. தொழிலை விடவும் மனசில்ல. அரசாங்கம் இந்தக் கலையின் மேல் பார்வையைத் திருப்பி, பள்ளி கல்லூரிகளில் நடத்த ஏற்பாடு பண்ணுனா, இந்தக் கலையும் உயிரோடு வளரும். கலைஞர்களின் வயிறும் பசியாறும்யா. என்றார். வற்றிப் போன உடைந்த குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.