Skip to main content

புதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

1954-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றது. ஆனால் 1963-ஆம் ஆண்டுதான் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முழுமையாக இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வந்தது. அந்த 1963-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1968-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுவை சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது காலத்தில் பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த பகுதிகள் நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது, வரி சீரமைப்பு செய்யப்பட்டது. 1971-ல் காங்கிரஸ் கட்சி மோகன் குமாரமங்கலம் எம்.பி யாக வெற்றி பெற்றார். 1977-ஆம் ஆண்டு அ.தி.மு.கவை சேர்ந்த அரவிந்த பாலாபழனுார் வெற்றி பெற்றார். இவரது காலத்தில் புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க எடுத்த முன்னெடுப்புக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதன்பிறகு புதுச்சேரியில் அ.தி.மு.கவுக்கு பின்னடைவுதான். அதேசமயம் காரைக்கால், புதுச்சேரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

pondycherry

 

1980, 1984, 1989  தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சண்முகமும், 1991, 1996, 99 தேர்தல்களில் எம்.ஓ.ஹெச்.பாரூக்கும், 2009-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி என சுமார் 50 ஆண்டு காலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது புதுச்சேரி. 1980 முதல் 91 வரை எம்.பியாக சண்முகம் காலத்தில் சுதேசி பஞ்சாலைகள் இயக்க நடவடிக்கை எடுத்தார். 1991 முதல் 2004 வரை எம்.பி.ஆக இருந்த  எம்.ஓ.ஹெச்.பாரூக் பெட்ரோலியத்துறை இணையமைச்சராகவும் இருந்தார். லாஸ்பேட்டை விமான நிலையம் அமைக்க காரணமாக இருந்தார்.  

 

இடையில் 1998-ல் அ.தி.மு.கவை சேர்ந்த கல்மண்டபம் ஆறுமுகமும், 2004-ல் பா.ம.கவை சேர்ந்த மு.இராமதாசும், 2014-ல் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த ராதாகிருஷ்ணனும் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
 

2004 முதல் 2009 வரை எம்.பியாக இருந்த பா.ம.க இராமதாஸ் காலத்தில் பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என தமிழில் மாற்றப்பட்டது. 700 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டது. 2014-ல் எம்.பியான ராதாகிருஷ்ணன் காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளாட்சிக்கு முழுவீச்சில் ஒதுக்கி செயல்படுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை தொடரமைப்பு செயல்படுத்தப்பட்டது.    

 

கடந்த 2014 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 2,55,826 ஓட்டுகள் (34.57 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 1,94,972, (26.35 சதவீதம்), அ.தி.மு.க 1,32,657 (17.93 சதவீதம்), தி.மு.க. 60,580,(8.19 சதவீதம்), பா.ம.க 22,754 (3.07 சதவீதம்), இந்திய கம்யூனிஸ்ட் 12,709 (1.72 சதவீதம்) ஓட்டுகள் பெற்றன.
 

இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க ஒரு அணியாகவும்,  காங்கிரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லீம் அமைப்புகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
 

2014 தேர்தல்படி இவ்விரு அணிகளில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வாங்கிய ஓட்டு சதவீதத்தின்படி கணக்கிட்டால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 55.57 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 36.26%ஆக ஓட்டு சதீவீதமும் உள்ளது. ஆனாலும் 2014 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு ஓட்டு சதவீதம் குறைந்தது. மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இப்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. எனவே காங்கிரஸ் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.
 

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். அதேசமயம் வைத்திலிங்கத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான வேட்பாளரை தேர்வு செய்வதில்  என்.ஆர்.காங்கிரஸ் குழப்பத்திலேயே உள்ளது.

 

pondycherry

 

புதுச்சேரி மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்த்தல், 8420 கோடி கடனை தள்ளுபடி செய்தல், புதுச்சேரி துறைமுக திட்டத்தை முழுமைபடுத்துதல், புதுச்சேரி – சென்னை தொடர்வண்டி திட்டத்தை செயல்படுத்துதல் என பல முக்கிய திட்டங்கள் மக்களவை வேட்பாளர் முன் நிற்கின்றன. இவைகளில் கூடுதல் அக்கறையும், முனைப்பும் காட்டுபவராக தேர்வு செய்யப்படுவது புதுச்சேரிக்கு முக்கியம்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

 "மக்கள் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"People should be vaccinated without neglect" - Chief Minister Rangasamy's request!

 

புதுச்சேரி சுகாதாரத்துறையில் 136 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கியதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிவதற்காக 136 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.  இதனிடையே, "மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"  என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக ரங்கசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: "கரானா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் ஒழிய மரணத்திலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாகும் என  மருத்துவர்கள் கூறுகின்றனர்.  


நிச்சயமாக ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்  கரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். தேவையான தடுப்பு ஊசிகள் சுகாதாரத்துறை இடம் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

 

Next Story

நியமன எம்.எல்.ஏ. விவகாரம்..! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Nominated MLA  Adjournment of judgment without specifying a date.

 

புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும்,  பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 07ஆம் தேதி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அமைச்சரவை பதவி ஏற்கவும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

 

இதனிடையே பாஜகவைச் சேர்ந்த கே. வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆர்.பி. அசோக்பாபு ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டது. அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த உத்தரவால் புதுச்சேரியில் குழப்பம் நிலவிவருகிறது. 

 

இந்த நிலையில், இந்த நியமன உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்தும், நியமன எம்.எல்.ஏக்கள் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்கத்தின் தலைவருமான கோ.அ. ஜெகந்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (20.05.2021) விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனனும், "அரசு பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளது. எனவே மூன்று பேர் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை" என வாதிட்டனர். மேலும், நியமன எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள்,  "அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்கக்கூடாது" என வாதிட்டனர்.

 

அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஞானசேகரன்,  "சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில், நியமன உறுப்பினர்கள் நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என வாதிட்டார்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.