Skip to main content

சி.எப்.எல் எனும் விஷம்

Published on 26/04/2018 | Edited on 27/04/2018

மனித வாழ்வில் ''மாற்றம் அடிக்கடி வந்துபோகும்'' அதனால்தான் "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என கூறினார்கள். அன்றாட வாழ்விலிருந்து விஞ்ஞானம் வரை எல்லா விஷயங்களும் காலத்தின் போக்கில் மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் விஞ்ஞான கண்டுபிடிப்பில் நடக்கும் மாற்றமானது சில நேரங்களில்  மக்களின் பொருட்செலவையோ, தரத்தையோ குறிவைக்கின்றன. சில நேரத்தில் மனித ஆரோக்கியம் சார்ந்த கவனங்களை எடுத்துக்கொள்ள மறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றில்தான் வந்து சேர்கிறது சி.எப்.எல் (compact fluorescent lamps)எனும் பல்புகள்.  இன்றளவிலும் நகரத்திலிருந்து கிராமங்கள் வரை படர்ந்து ஒளிர்ந்துவரும் இந்தவகை பல்புகளை ஒரு காலத்தில் அரசே நம் வீடுகளில் உபயோகிக்க பரிந்துரை செய்தது. இதை நாம் விளம்பரங்களில் எல்லாம் பார்த்திருப்போம். 

cfl

 

சி.எப்.எல் பல்புகளை பொறுத்தவரை அவை நாம் அதற்கு முன் அதிகமாக உபயோகித்து வந்த குண்டு பல்புகளுக்கு மாற்று, அவற்றுடன் ஒப்பிடும்போது குறைவான மின்சக்தியில், அதிகநேரம் எரியும். மின்சார சிக்கனம், பால் போன்ற அதிக வெளிச்சம் போன்றவை அவற்றின் மேன்மைகள். இந்த பல்புகளில் சில பாதிக்கும் இயல்புகள் இருக்கிறது. இது வெகுசிலருக்கும் தெரியாத ஒன்று. குண்டு பல்புகளை உபயோகிக்கத்தால் அதிலிருந்து வரும் வெப்பமானது புவி வெப்பமாதலை ஊக்குவிக்கும் அதே வேளையில் மின்சார செலவு அதிகமாகும் போன்ற காரணங்களாலேயே சி.எப்.எல் பல்புகள் அந்த இடத்தை பிடித்தன என்றாலும் மனிதவளத்தையே பதம்பார்க்கும் கேடுகள் சி.எப்.எலில் உள்ளது என்பதுதான் உண்மை.


காரணம் அந்த பல்புகளின் உபயோகிக்கும் நேரத்தை விட அதை டிஸ்போஸ் செய்வதில்தான் ஒளிந்திருக்கிறது பாதரசம் எனும் உலோக விஷம். சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக நினைத்து வாங்கி பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். யூசர் மேனுவலை படிக்காமல் இந்த பல்புகளை உபயோகிக்க கூடாது. உதாரணமாக குண்டு பல்புகள் உடைத்தால் துணியினால் துடைத்து சுத்தம் செய்துவிடலாம் ஆனால் உடைந்த  சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக கைகளால் தொடக்கூட கூடாது. வேட்கம் கிளீனர், துணி என எதைவைத்தும் சுத்தம் செய்யக்கூடாது ஏனெனில் உடைந்த பல்பில் இருந்து வெளியேறும் பாதரசம் அறைமுழுவதும் பரவி பல தொற்றுக்களை பரப்பும்.

 

cfl

 

அமேரிக்காவில் உடைந்த சி.எப்.எல் பல்புகளை என்ன செய்யவேண்டும் என்ற ஒரு முறையையே வைத்துள்ளது அரசாங்கம்.

உடைந்த சி.எப்.எல் பல்புகளை வேட்கம் க்ளீனரால், துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் அறைமுழுவதும் பாதரசம் பரவும், பல்பு உடைந்த உடனே அந்த அறையின் நெடி காற்றை சுவாசிக்க கூடாது, கையுறைகளை உபயோகித்தே உடைந்த சி.எப்.எல் பல்புகளை கையாள  வேண்டும். அதைவிட முக்கியமானது சி.எப்.எல். குப்பைகளை சாதாரண குப்பைகளுடன் சேர்த்து போடக்கூடாது எனவே அங்கு சி.எப்.எல் உடைந்த பல்புகளை சேகரிப்பதெற்கென தனி மறுசுழற்சி மையங்கள் உள்ளன. அங்குதான் கொண்டு சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்படி இருக்க நாம் இங்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சி.எப்.எல் பல்பிலுள்ள 68 மில்லிகிராம் பாதரசத்தையும் மண்ணுக்கு பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம் சரியான கையாளும் முறை இல்லாமல் இருக்கிறது என்பது நிதர்சனமே. ஆயிரம் மணிநேரம் ஒரு குண்டு பல்பு எரிய மின் உற்பத்திக்கு 71 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது, ஆனால் சி.எப்.எல் பல்பிற்கு 14.2 கிலோ நிலக்கரியே போதுமானது என்றாலும் மின் உற்பத்தியின் போது வெளியேறும் பாதரச அளவை கட்டுப்படுத்துவதுகூட எளிதானது. ஆனால் ஆயிரம் கோடிக்கணக்கில் செயலிழந்து போகும் சி.எப்.எல். பல்புகளை சம சமதளங்களிலும், குப்பை மேடுகளிலும் நாம் சாதாரணமாக வீசும் போதும் வெளியாகும் பாதரசத்தின் அளவு கட்டுப்படுத்த முடியாத சீரழிவை தரும்.
 

cfl

 

நாம் யாரும் மறக்க முடியாத ஒன்று ''மினாமடா'' 1950களில் மினாமடா வளைகுடாவை சுற்றியுள்ள மக்களை நரம்பியல் நோயின் மூலமாக உயிரிழக்க செய்தது  இந்த  பாதரசம்தான். மினாமிடாவை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் பாதரசக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு அவை மீன்களின் மூலம் மனித உணவு சங்கிலியில் புகுந்து இறுதியில் மனித உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த தாக்கம் மினாமிடா என்ற பெயராலே குறிப்பிட்டபட்டுவருகிறது. இன்று சமதளத்திலும் குப்பை மேடுகளிலும் கொட்டப்படும் சி.எப்.எல் பல்புகளிலிருந்து வெளிப்படும் பாதரசம் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பது நாம் பெரிதாக கவனிக்காத ஆபத்தின் கேள்விக்குறிதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.