Skip to main content

“வழக்குல என்னென்னமோ நடக்குது...” -நக்கீரனிடம் மனம் திறந்த நிர்மலாதேவி (EXCLUSIVE)

Published on 19/12/2018 | Edited on 18/02/2019
nirmaladevi

 

 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக கூறி கைதுசெய்யப்பட்ட நிர்மலாதேவி அவ்வப்போது விசாரணைக்காக நீதிமன்றம் வருவார்.  யாருடனும் பேசாமல் மௌனமாகவே இருப்பார். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது அவரே விரும்பாமலும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் நிர்மலா தேவியை சந்தித்த நமது நிருபரிடம், நிர்மலா தேவி  பல உண்மைகளை கூறியுள்ளார்... அவர் கூறியது,

 

நக்கீரன்: உங்க அண்ணன் ரவி, அண்ணி வனஜா அருப்புக்கோட்டையில் சந்தித்து பேசினேன்.
 

நிர்மலா தேவி: ஓ அப்படியா, அவங்க என்னை பார்க்கவே வருவது இல்ல. அண்ணன், அண்ணி, எனது கணவர் எல்லாரையும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க. என்னை யாருமே பார்க்க வரல.

 

நக்கீரன்: உங்க கணவர்ட்ட பேசும்போது அவரு எதுமே பேச மாட்டிங்குறாரே?
 

நிர்மலா தேவி: அவர் என்மேல இருக்குற கோபத்துலதான் பேசாம இருப்பார். அவர சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க வரசொல்லுங்க நான் அவர்ட்ட பேசணும்.

 

நக்கீரன்: உங்க கணவர் விவாகரத்திற்கு விண்ணப்பிச்சிருக்கிறார். ஆனா நீங்க அவர பாக்கணும்னு சொல்றிங்களே?
 

நிர்மலா தேவி: அந்த ஆடியோ கேட்டதுல இருந்தக் கோபத்துல செஞ்சிருப்பார், நீங்க அவருக்கு மெசெஜ் அனுப்பி என்ன சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க.


 

nirmaladevi

 


நக்கீரன்: இந்த வழக்கு பற்றி சொல்லுங்க.
 

நிர்மலா தேவி: இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல, என்னென்னமோ நடக்குது.

 

நக்கீரன்: ரொம்ப நாளா உங்க வக்கீல் கோர்ட் வரவே இல்லையே ஏன்? ஒருவேளை வழக்கை விட்டு விலகிட்டாரா?
 

நிர்மலா தேவி: வக்கீல் வழக்கை விட்டு விலகிட்டாரு அப்படிங்குறதே நீங்க சொல்லிதான் தெரியும். எனக்கு இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல. கேஸ் பத்தி எதும் கேக்காதீங்க, அதை விடுங்க. வீட்டில இருக்குற எல்லோரையும் என்ன வந்து பார்க்க சொல்லுங்க.

 

நக்கீரன்: ஜெயில்ல எதும் உங்களை சித்திரவதை பண்றாங்களா?
 

நிர்மலா தேவி: அதெல்லாம் இல்லை, பழைய உடைகள் மட்டும்தான் இருக்கு, புது உடை கொடுக்கக்கூட ஆட்கள் யாரும் வரவில்லை. அதே உடைகளைதான் நான் திரும்பத் திரும்ப போட்டுக்குறேன். ஸ்பைனல் கார்டில் பிரச்சனை  இருக்கு. அதிகமாக வலி எடுக்குது.

 

நக்கீரன்: மருத்துவமனைக்கு செல்லவில்லையா?
 

நிர்மலா தேவி: அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. (விரக்தியில் சிரித்தார்)

 

இந்த வழக்கை நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.