Skip to main content

ரூபாய் 3,200-ல் தனி விமானத்தில் பயணித்த அதிர்ஷ்டசாலி!!!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
aeroplane

 

 

 

விமான பயணம் என்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய ஒன்று, பலருக்கு விமானத்தில் பயணம் செய்வது என்பதே கனவாக இருக்கிறது. அப்படி விமானத்திலும் சாதாரணமாக பயணிப்பவர்களுக்கு கனவாக இருப்பது என்ன என்றால் தனிஒருவனாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.இக்கனவு பலருக்கு சாத்தியமற்றது. ஒருவேளை மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் தனி விமானத்தை வாங்கி அதில் பயணம் செய்யலாம் அல்லது அனைத்து சீட்டுகளுக்கான டிக்கெட்டடை வாங்கி பயணம் செய்யலாம். இது போன்று  இல்லாமல் சாதாரண விமான கட்டணத்தில் தனி ஒருவனாக பயணிக்க என்ன வேண்டும்? கண்டிப்பாக அதிர்ஷ்டம் வேண்டும். 

 

aeroplane

 

கோர்ஃபு தீவு, கிரீஸ் நாட்டிலுள்ளது. பிரிமிங்காம் நகரம் இங்கிலாந்திலுள்ளது. நண்பர் திருமணத்திற்காக இத்தீவிற்கு வந்தவர், பின்னர் பிரிமிங்காமுக்கு செல்வதற்காக கடந்த சனிக்கிழமை அன்று விமான டிக்கெட் எடுத்துள்ளார் சாத் ஜிலானி. திருமணத்தை முடித்துவிட்டு, பிரிமிங்காமுக்கு திரும்புவதற்காக கோர்ஃபு விமான நிலையத்திற்கு வந்தவருக்கு தொடக்கம் முதலிருந்தே ஆச்சரியம். விமான நிலையத்திற்கு வந்தவரை காரில் அழைத்துக்கொண்டு விமானம் ஏறும் இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

 

 

 

 

அங்கே இரு விமானி மற்றும் ஏர்ஹோஸ்டர்ஸ் குழுவும் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பார்க்க வெளியே வந்து வரவேற்க காத்திருந்தனர். ஜிலானியை வரவேற்கும் போதே, "வெல்கம் அப்போர்ட் யுவர் பிரைவேட் ஜெட் சார்"  என்று ஆச்சரியத்தை தந்துள்ளனர். ஆமாம் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது. புதிய போயிங்738 வகை விமானம், மொத்தமாக 168 சீட்டுகளில் தனி ஒருவனாக பயணிக்க இருக்கிறார். 

 

aeroplane 1

 

 

 

உள்ளே வரவேற்ற உடனேயே, தன்னுடைய மொபைல் கேமராவை ஆன் செய்து வெறிச்சோடி இருக்கும் நீண்ட விமான இருக்கைகளை வீடியோ எடுக்க, பின்னர் ஏர்ஹோஸ்டர்ஸ் அனைவரும் சேர்ந்து அவருக்கு அளித்த பாதுகாப்பு செயல் விளக்கத்தையும் வீடியோ எடுத்துள்ளார். காக்பிட் என்று சொல்லப்படும் விமானி இருக்கையிலும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தான் தனியாக உறங்குவது, மொத்த விமானக்குழுவுடன் புகைப்படம் என்று சொகுசாக அதுவும் சாதாரண கட்டணமான 40 யூரோவில்(இந்தியாவில் ரூபாய் 3,200) 2:30 மணி நேரம் பயணித்துள்ளார். பிரிமிங்காமுக்கு விமானம் வந்து சேர்ந்ததும், அவருக்கு 60 யூரோவில் இன்னுமொரு விமான டிக்கெட் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஃபு டூ பிரிமிங்காம் விமான வழி, பயணிகள் அரிதாக பயன்படுத்துவது. அன்று வேறொருவரும் டிக்கெட் பெற்றுள்ளார், கடைசியில் அவரும் வரவில்லை என்பதால் அந்த விமானம் 28 வயதுடைய சாத் ஜிலானியின் தனி விமானமாக 2:30 மணிநேரத்திற்கு மாறியுள்ளது. அதிர்ஷ்டம் அவருக்கு உச்சத்தில் இருக்கிறது போல...    

 

                                   

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.