Skip to main content

குழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை? - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
pregnant


வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜில்லியன் பிராக்கல் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு ஹேஸ்டேக் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட சமூக வலைதள நிறுவனம், பிரசவம் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பொருட்கள் என்று விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளது. 
 

இணைய பயன்பாட்டாளர்களுக்கு காட்டப்படும் விளம்பரங்கள் பல, அவர் என்ன பொருட்களை பற்றி தேடுகிறார் என்பதை தெரிந்துகொண்டும், சமூக வலைதளத்தில் அவருடைய பதிவுகளின் வெளிப்பாட்டை தெரிந்துகொண்டுதான் காட்டப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை வைத்துதான் விளம்பரத்திற்கான அல்காரிதத்தை அமைக்கிறது சமூக வலைதள நிறுவனங்கள். 
 

இந்த அல்காரித அமைப்பில் ஜில்லியன் பிராக்கல்லுக்கும் விளம்பரங்கள் காட்ட, அவரும் அதனுள் சென்று சில விஷயங்களை எல்லாம் தேட ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஜில்லியனுக்கு தேவை இருக்கிறது என்று பிரசவம் மற்றும் குழந்தை சம்மந்தமான விளம்பரங்களையே காட்டப்பட்டுள்ளது. ஜில்லியனுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால் மிகவும் மனம் நோந்துபோன நிலையில் மூன்று நாட்களாக மொபைல் பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த துயர சம்மபவத்திலிருந்து மீண்டு வருவோம் என்று மனதை உறுதிப்படுத்திகொண்டு செயல்பட இருக்கும்போது, இணையத்தை பயன்படுத்தும் போதெல்லாம் பிரசவம், குழந்தைகள் சம்மந்தமான விளம்பரங்களே மீண்டும் வந்திருக்கிறது. இதனால் மீண்டும் மனம் நொந்துபோனவர், இணையத்திலேயே இந்த துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு தேடியும் உள்ளார். ஜில்லியனின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில், இறந்த குழந்தைக்காக வருத்தமும் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் முன்பு வந்த அதே மாதிரியான விளம்பரங்கள் வந்துகொண்டு இருந்திருக்கிறது. கோபமடைந்த ஜில்லியன் சமூக வலைதளங்கிடம் இதுகுறித்து பேசியே தீர வேண்டும் என்று ட்விட்டர் வழியாக வெளிப்படையாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.


 

 

“உங்களுக்கு நான் பிரசவமாக இருக்கிறேன் என்பது எனக்கு நன்கு தெரியும். என்னால் அந்த ஹேஸ்டேகுகளை தவிர்க்க முடியவில்லை, அதில் நான் பிரசவமாக இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டு என்னை டிரேஸ் செய்ய தொடங்கிவிட்டீர்கள். நானும் பேஸ்புக்கில் வந்த விளம்பரங்களில் பிரசவமாக இருக்கும் பெண்கள் அணியும் உடைகள் பற்றியான விளம்பரங்களை ஒருமுறையோ இரண்டு முறையோ உள்ளே சென்று பார்த்தேன். நான் என்ன சொல்வது. உங்களுடைய பன்பாட்டாளர்.
 

சமூக வலைதளத்தில் என் சீமந்தத்தின்போது வாழ்த்து தெரிவித்த பலருக்கும் நான் நன்றி தெரிவித்திருப்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். பிரசவத்தின்போது அணியும் உடையபற்றி கூகுள் செய்யும்போது தெரிந்துகொண்டீர்கள். இவ்வளவு ஏன் அமேசான் என்னுடைய பிரசவ தேதியை முதல் தெரிவித்தது. 
 

ஆனால், குழந்தை நகரவில்லை என்று நான் கூகுளில் தேடியதை நீங்கள் பார்க்கவில்லையா? எப்போதும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நான், மூன்று நாட்களாக சமூக வலைதளம் பக்கமே வராமல் இருந்தேன் அதை பார்க்கவில்லையா? குழந்தை இறந்துவிட்டது என்று என் நண்பர்கள் பதிவிட்டிருந்ததை பார்க்கவில்லையா? ஏன் இதை எல்லாம் உங்களால் ட்ரேக் செய்யமுடியாதா?
 

உங்களுக்கு தெரியுமா, அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 24,000 குழந்தைகள்பிரசவத்தின்போதே இறந்து பிறக்கிறது. உலகம் முழுவதும் இணையத்தை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். உங்களிடம் ஒன்று சொல்லவா, நானும் எனது கணவரும் மூன்று நாட்கள் அழுதுகொண்டே இருந்து, பிறகு அந்த விஷயத்திலிருந்து மீண்டு வரலாம் என்று மொபைலை எடுத்தால் அதில் வருகின்ற விளம்பரங்கள் அனைத்தும் பிரசவத்தை பற்றியானதும் குழந்தையை பாற்றியானதுமாக இருந்து மேலும் என் மனதை சுக்குக்சுக்காக நொறுக்கிவிட்டது. 
 

மனமுடைந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த விளம்பரத்தை பார்க்கவில்லை என்று கிளிக் செய்தால் எதற்காக என்ற கேள்வியை திரும்பி கேட்கப்படுகிறது. அதிலும் அந்த விளம்பரம் எனக்கு சம்மந்தமில்லாதது என்று சொல்ல வேண்டி உள்ளது. அது உண்மையாக இருந்தாலும் வேதனை அளிக்கிறதே. உங்களுடைய அல்காரிதங்களாக, குழந்தை பிறந்துவிட்டது, அதுவாகவே சந்தோச செய்தியை உருவாக்கிகொண்டு, எங்களுக்கு தேவையில்லாத விளம்பரங்களை காட்டுகின்றன. அவர்கள் காட்டும் விளம்பரங்களுக்கு பதிலாக வேறு ஒன்றை நான் யோசித்து வைத்திருகிறேன். இதெல்லாம் போதாதென்று, இன்ஸுரன்ஸ் கம்பெனிகள் உங்களுடைய குழந்தைக்காக ரெஜிஸ்டர் செய்யுங்கள் என்று மெயில் அனுப்புகிறார்கள். 
 

டெக் நிறுவனங்களே உங்களிடம் நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்ட உங்களது அல்காரிதங்களுக்கு, எனக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கான ஸ்மார்ட் அலகாரிதங்களாக இருக்க வேண்டும். என் குழந்தை இறந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்டு பின்னர் அதற்கு இணங்க விளம்பரங்களை வழங்குங்கள், அல்லது வழங்காமல் போங்கள்” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் ஜில்லியன் பிராக்கல். 
 

இந்த கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரத்துறை தலைவர் சோகமான பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அதில், மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுபோன்ற விளம்பரங்கள் வராமல் இருக்க செட்டிங்கை கிளிக் செய்து, ஹைட் டாபிக்குள் சென்று பேரண்டிங் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் இதுபோன்று வராது என்றும் பேஸ்புக் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.