Skip to main content

ஒரு காஃபிக்குள் இத்தனை கதைகளா...!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

பரிணாம வளர்ச்சியில் வேதியல் மூலக்கூறுகளைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய விஷயத்தை விலங்குகள்  மீது செலுத்தி அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அதை மனிதனும் பயன்படுத்தலாம் என்று சட்டமும் அறிவியலும் சொல்லுகிறது. ஆனால், இந்தச் சட்டமும் அறிவியலும் மனிதன் மூளைக்கு எப்படி தட்டுப்பட்டது என்ற கேள்வி எழுமாயின் அதன் விடையும் இதிலே இருக்கிறது. எப்படி என்றால் மனித இனம் முதல் முதலில் உண்ட உணவு என்பது அவர்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியில் விலங்குகளும் பறவைகளும் எதைத் தின்றதோ அதைத்தான் அவர்களும் தின்றனர். இப்படி மெய்யுணர்வில் உணர்ந்து பரிசோதித்த மெய்யறிவியலைத்தான் இன்றைய நவீன உலகம் ஞான அறிவியல் என்றும் சட்டம் என்றும் சொல்லுகிறது. சரி இவ்வளவு வியாக்கியானம் எதற்கு என்றால் இன்று, மனித இனத்தின் மிகமுக்கியமான நாள். அதுமட்டுமின்றி இதற்கு பிறகு பார்க்கப்போகும் உலக காஃபி தினத்தை பற்றிய வரலாற்று உண்மையும் கதையும் இதனோடு சம்பந்தம் பட்டதாக இருக்கும். அதற்குதான்.

 

cc

 

இன்று உலக காஃபி தினம். இந்த காஃபிக்கும் நம் மனித இனத்திற்கும் 11 நூற்றாண்டுகால உறவு இருந்து வருகிறது, இது இனியும் இருக்கும் என்பதுதான் உண்மை. சரி இந்த காஃபியை யார், எங்கு, எப்படி, கண்டுபிடித்தார்கள். இது எப்படி இன்று உலகம் முழுக்க வலம்வருகிறது. இதன் பிறப்பிடம் எது, பிழைப்பிடம் எது என்பதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

 

 

காஃபி, கண்டறிந்ததில் சில முகங்கள் இருக்கிறது. ஒரு காலகட்டம்வரையில், ஒன்பதாம் நூற்றாண்டில் எதியோப்பியாவில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த கால்டி என்பவரின் ஆடுகள் அங்கு செந்நிறத்தில் இருந்த ஒரு பழத்தை தின்றதும், அது உற்சாகத்துடன் ஓடுவதைக்கண்டு அவரும் அந்தப் பழத்தை சுவைத்துப்பார்த்து அதில் ஏதோ ஒரு வித்தியாசமும் புத்துணர்ச்சியும் இருப்பதைக்கண்டு அங்கு இருந்த ஒரு துறவியிடம் அதைத்தர, அதை அவர் தீயிலிட்டு சுட அங்கு இருந்தவர்களுக்கு மயக்கநிலை ஏற்பட்டதாகவும், பின் அந்த பழத்தின் சூட்டை குறைக்க தண்ணீரில் போட்டதாகவும் பின் அந்தத் தண்ணீர் குடித்ததில் இருந்துதான் உலகத்தின் முதல் காஃபி பிறந்ததாக ஒரு கதை இருக்கிறது. 

 

 

மொரோக்கோ நாட்டை சேர்ந்த அபு ஹல் ஹசன் என்பவர் எத்தியோப்பியாவிற்கு சென்றிருந்தபோது, அங்கு இருக்கும் பறவைகள் மற்றப் பறவைகளைவிடவும் சற்று உற்சாகத்துடன் இருப்பதைக்கண்டு அவரும் அந்தப் பறவைகள் சாப்பிடும் பழத்தை தேடி சாப்பிட்டபோது அவருக்குள்ளும் அந்த உற்சாகத்தை கண்டுள்ளார். இன்னொரு பக்கம் பார்க்கும்போது, ஷேக் அபுல் ஹாசன் என்பவரின் சீடர் ஒமர் என்பவர் நாடு கடத்தப்பட்டபோது அங்கு பசியில் இருந்த அவர், சாப்பிட எதுவும் கிடைக்காமல் அருகில் புதரினுள் இருந்த ஒரு பழத்தை எடுத்து திறன்றதாகவும் அது கசப்பாக இருக்க அதை தீயிலிட்டு சுட்டு, பின் அதை நீரில் போட்டு அந்த நீரை குடித்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. அப்த அல் கதிர் என்பவர் எழுதியுள்ள குறிப்புகளை சான்றாகக் கொண்டு பெரும்பாலானோர் ஓமரின் கதைதான் உண்மை என்று கருதுகிறார்கள்.

 

cc

 

ஏமன் நாட்டில் காஃபி கடவுள் வழிபாட்டில் முக்கியமானதாக இருந்து இருக்கிறது. காரணம், சூஃபிக்கள் இரவு நேரங்களில் கடவுளை வணங்கும்போது தூக்கம் வராமல் இருக்க காஃபியை உபயோகித்து இருக்கிறார்கள். அதன் பின் சற்று காலத்திற்குள் மெக்காவில் காஃபிக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்கான காரணமும் அதன் உற்சாகம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

இது இந்தியாவிற்கு வந்தத்தின் கதைதான் மிக சுவாரசியமானது. 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பாபா பூடன் எனும் சூஃபி துறவி ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஏமன் வழியாக இந்தியா திரும்பும்போது, அங்கு காஃபியை சுவைத்துப் பார்த்திருக்கிறார். அது உற்சாகத்தை அளித்ததைத் தொடர்ந்து அதனை இந்தியாவிற்கு கொண்டுவர முயன்று இருக்கிறார். ஆனால், அவர்கள் அதைத்தர மறுத்து இருக்கிறார்கள். பின் யாருக்கும் தெரியாமல் சில விதைகளை மறைத்து இந்தியாவிற்கு கொண்டுவந்து தன் மாநிலத்தில் உள்ள சிக்மகளூரில் விதைத்து இருக்கிறார். அதுதான் இன்று இந்தியா முழுக்க பரவியுள்ளது. இப்படித்தான் காஃபி மனித இனத்திற்கும், இந்தியாவிற்கும் வந்துள்ளது.   

 

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.