Skip to main content

பாலத்தை உடைக்க மணல் திருடர்களுடன் ஒப்பந்தம்? அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
bridge

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் குடிதண்ணீருக்கு கூட கையேந்தி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால் விவசாயம் பொய்த்து நிலத்தடி நீரை சேமிக்கும் பனைமரங்கள் கூட பட்டுச் சாயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 


    மணல் நிறைந்த பகுதிகளில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து பல மாவட்டங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கி வரும் நிலையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படும் இடத்திற்கு அருகிலேயே மணல் அள்ளிவிட்டதால் அதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 


    தற்போது கொள்ளிடம் ஆற்றுப் பாலம் உடைய மணல் கொள்ளை தான் காரணமா என்ற கேள்விக்கு அப்படிச் சொல்ல முடியாது என்று பொதுப்பணித்துறையை வைத்துள்ள முதலமைச்சரே பதில் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் மணல் திருடர்கள் பாலத்தின் அடியில் அள்ளிய மணல் தான் கொள்ளிடம் பாலம் உடைய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.  

bridge


 

bridge


    மேலும் இதே போல இன்னும் பல பாலங்களை உடைக்க மணல் திருடர்களிடம் எழுதப்படாத ஒப்பந்தம் செய்துள்ளனர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் என்று குற்றச்சாட்டையும் எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 


    அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு என்பது மிகப் பெரிய ஆறு. இதில் புதுக்கோட்டை  - திருமயம் சாலை  பகுதியில் ஒரு நாளைக்கு இரவில் 300 லாரிகள் வரை மணல் திருடுகிறது. அவசரத்திற்கு மரங்கள் இருக்க அதன் வேர்கள் தெரியும் அளவில் தோண்டி அள்ளிவிடுகிறார்கள். அதாவது மரமிருக்க வேர் தோண்டும் பணி நடக்கிறது. இதே போல அந்த ஆறு முழுவதும் சுமார் 50 கி.மீ தூரத்திற்கு மணல் கொள்ளை நடக்கிறது. அதிகாரிகள் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. பெயருக்கு சில மாட்டுவண்டிகளை மட்டும் பிடித்து வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    அறந்தாங்கி பகுதியில் அழியாநிலை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் ஆலமரத்தடியில் தொடர் போராட்டத்தை அறிசவித்து நடத்தினார்கள். சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கோயில் இருக்கும் மணல் திட்டு என்பது தெரியாமல் போய்விட்டது. மணல் குவாரி அமைக்கவில்லை என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 

bridge



 

bridge


    ஆனால் போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் எந்த ஆற்றையும், ஆற்று மணலையும் காத்து நிலத்தடி நீரை சேமிக்க நினைத்தார்களோ அந்த வெள்ளாற்றில் தினசரி 500 லாரிகளில் 5 பொக்கலின் வைத்து மணல் கொள்ளை நடக்கிறது. இத்தனைக்கம் அறந்தாங்கி நகரில் இரந்து 3 கி.மீ. தூரத்தில் தான் அந்த கொள்ளை நடக்கிறது. எந்த அதிகாரியும் கண்டகொள்ளவில்லை. 

அதனால் அறந்தாங்கி கோட்டாட்சியர் முதல் வட்டாட்சியர், மற்றும் காவல் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுத்துவிட்டு மணல் திருடுகிறார்கள் என்பதை ஒரு துண்டறிக்கையாக வெளியிட்டார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். அந்த துண்டறிக்கை வந்நத நாளில் சில மாட்டுவண்டிகளை மட்டும் பிடித்தார் வட்டாட்சியர் கருப்பையா.. ஆனால் ஒரு லாரி கூட பிடிபடவில்லை. 

 

 

    அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் வெள்ளாற்றை கடக்க தரடமட்டப் பாலம் இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் அதிகமாக சென்றதால் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டதுடன் பல கிராமங்கள் தண்ணீரில் சிக்கி தவித்தது. அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்போது அந்த பாலம் எப்ப சாயும் என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள் மணல் கொள்ளையர்கள்.


    அதாவது.. வெள்ளாற்றில் மணல் திருடும் கொள்ளையர்கள் அதிகாரிகளின் எழுதப்படாத உத்தரவின் பேரில் பாலத்தின் கீழே உள்ள தூண்களை கூட மணலுக்காக தோண்டிவிட்டனர். அதனால் அந்த பாலத்தை தாங்க நிற்கும் தூண்கள் வலுலிழக்க தொடங்கி உள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை தண்ணீர் அதிகமாக வந்தால் அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் உள்ள வெள்ளாற்றுப் பாலம் எந்த நிலையிலும் சாயும் வாய்ப்பு உள்ளது. இதை பல முறை நேரில் பார்த்த வருவாய்துறை அதிகாரிகள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. காரணம் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சம்.


    அதனால் தான் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. வெள்ளாற்றுப் பாலத்தை உடைக்க மணல் கொள்ளையர்களிடம் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் அதிகாரிகள் என்று..


    இதன் பிறகும் இப்படி தூண்களைத் தோண்டி மணல் திருடினால் பாலம் இருக்காது. அதனால் ஏற்படும் விபத்தில் எத்தனை உயிர்கள் போகும் என்பது தெரியாது. போக்குவரத்தும் பாதிக்கும் அரசு பணமும் விரயமாகும். இதை தடுக்கும் அதிகாரி யார்? தடுக்க வேண்டிய அதிகாரிகளே மணல் கொள்ளையர்களை இரவில் சந்திக்கும் நிலை என்றால் எப்படி?

 

 


    அதே போல விராலிமலைத் தொகுதியில் ஆவூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணையாக காக்கி சீருடை அணிந்த அதிகாரிகளே பாதுகாப்பாக சென்று பிரதான சாலைகளில் கையசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு வருகிறார்கள். 


    பல நேரங்களில் வெகுண்ட மக்கள் மணல் லாரிகளை சிறை பிடித்து வைத்துக் கொண்டாலும் அதை அதிகாரிகளே மீட்டு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் வறண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மீண்டும் வறட்சியாகி பாலைவனமாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
 

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“நான்தான் பாலத்தை கட்டவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் முடிவு” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 PM Modi proudly says It was Lord Krishna's decision that I should build the bridge

குஜராத் மாநிலத்தில், 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று (25-02-24) திறந்து வைத்தார். நாட்டின் மிக நீண்ட பாலமான இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர், நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுசென்று காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு, துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது, நான் சுதர்சன் சேது திட்டத்தை, அப்போது இருந்த காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் சாத்தியப்படுத்தியுள்ளார். இன்று துவாராகவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளேன். இன்று என் கனவு நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்காகவே. இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 

2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிக்கப்படாமல் நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்” என்று கூறினார்.