Skip to main content

உண்மை வரலாற்றை உரக்கச் சொன்ன தோழர்! -பாராட்டு மழையில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர்

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

ழைக்கும் பெண்களின் தன்னெழுச்சியான ஒருங்கிணைப்பும், உரிமை வேட்கைக்கான முழக்கமுமே, வரலாற்றில் ‘பெண்கள் தினம்’ என்ற ஒன்று உருவாகக் காரணம். சம ஊதியம், சம உரிமை மற்றும் கண்ணியம் என அன்று பெண்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள் இன்றும் பெயரளவிலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை, பெருமையை உரக்கப் பேசவேண்டிய கட்டாயம் எழுகிறது.
 

jawahar



அந்த வகையில், உலக மகளிர் தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி, சென்னை புரசை வாக்கத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி அனைத்து மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. பறையிசையுடன் மாலையில் நிகழ்ச்சி உற்சாகமாக தொடங்கியது. கார்மெண்ட்ஸ் பேஷன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பழனிபாரதி வரவேற்றுப் பேச, புதிய குரல் தலைவர் ஓவியா துவக்கவுரை நிகழ்த்தினார். இஊஎஒ அமைப்பைச் சேர்ந்த பிரேமலதா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான தேர்தல் அறிக்கை வெளியீடு நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தல்களில் பெண்களுக்கு தேவையான கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தும் இந்த அறிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி மற்றும் பிராவோ அமைப்பின் ஓல்கா ஆகியோர் வெளியிட்டனர்.
jawahar
நக்கீரன் வெளியீடான "மகளிர் தினம் உண்மை வரலாறு' நூலின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹரை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. “""இரண்டு வருடங்களுக்கு முன்புவரை பெண்கள் தினம் என்றாலே ஒரு பொத்தாம் பொதுவான கதையைச் சொல்வார்கள். ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் மகளிர் தினத்தின் வரலாறு குறித்து நக்கீரன் இதழில் தொடராக எழுதி, பின்னர் வெளியான இந்த நூல், அதன் உண்மை நோக்கத்தை, வரலாற்றுத் தெளிவோடு உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. இதற்காகவே அவர் இதில் பயணித்த லெனி எனும் பிரெஞ்சு அம்மையாரை நேரில் சந்தித்து தரவுகளைத் திரட்டியிருக்கிறார். பெண்களின் வரலாறு எப்போதுமே இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில், சோவியத் புரட்சி உருவாவதற்கு பெண்கள்தான் காரணம் என்ற உண்மையை உலகிற்குச் சொன்னதற்காகவே தோழர் ஜவஹரைப் பாராட்ட வேண்டும்''’என்றார் புதிய குரல் தலைவர் ஓவியா.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி பேசுகையில், “""மகளிர் தினத்தை பெண்கள் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை இன்றைய முதலாளித்துவ உலகம் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் உண்மை வரலாற்றைத் திரிப்பவர்கள். வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கொள்கையில் இருப்பவர்கள்.

எனவேதான், மகளிர் தினத்தின் உண்மை வரலாற்றை எழுதிய தோழர் ஜவஹரை பாராட்டிச் சிறப்பிக்க முடிவுசெய்தோம். இதோடு நிறுத்தாமல் பல்லாயிரக் கணக்கான பெண்களிடத்திலே இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தையும் நாம் உணர வேண்டும்''’என்றார் அழுத்தமாக.

""25-க்கும் அதிகமான மகளிர் அமைப்புகள் உருவாக்கிய அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பின் மூலமாக, "மகளிர் தினம் -உண்மை வரலாறு!'’நூலுக்காக எனக்கு சிறப்பு செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என பேசத் தொடங்கிய தோழர் ஜவஹர், ""எனது எழுத்துப் பணியிலும், வாழ்க்கையிலும் உற்ற துணையாக இருந்தோர் பலர். அவர்களின் சார்பில் சிலருக்கேனும், என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி சிறப்புசெய்ய விரும்புகிறேன். எனது தோழராக, தாயாக, மகளாக இருந்துகொண்டு என்னைப் பராமரித்துவரும் என் துணைவியார் தோழர் பூரணம் அவர்களுக்கும், நக்கீரன் இதழில் குறுந் தொடராக வெளிவந்த இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு "இதை விரிவுபடுத்தி தமிழ், ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடுவோம்' என்று ஊக்கப்படுத்திய தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், நான் சந்தித்த தலைசிறந்த மனிதாபிமானிகள் சிலரில் ஒருவரான என் தோழர் கண்ணன் அவர்களுக்கும், தோழமைகளில் எனக்கிருக்கும் மகள்களில் முதன்மையானவரான தோழர் ஓவியாவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''’எனக் கூறிக்கொண்டு, தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.



 

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

Next Story

துக்க வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்; திட்டக்குடியில் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Six women were injured in an electric shock at a funeral home and were admitted to hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் செறுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது முருகானந்தம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலைச் சொந்த கிராமமான கீழ் செறுவாய் கிராமத்திற்கு அவரது உறவினர்களால் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.