Skip to main content

சிறுநீரை இனி 'வேஸ்ட்'னு சொல்லக்கூடாது.. ஏன் தெரியுமா?

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

மனித சிறுநீரை உபயோகப்படுத்தி செங்கலை உருவாக்கும் முறையைக் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேப் டவுன் பல்கலைக்கழக (University of Cape Town) கட்டிட பொறியியல் துறை  மாணவர்கள். உலகிலேயே அதிக தண்ணீர் பஞ்சம் நிலவும் நகரமாகவும் 'ஜீரோ டே' எனும் தண்ணீரே இல்லாத நாளை சந்திக்கும் நகரமாகவும் இருக்கும் கேப் டவுனில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது. 

 

bb

 

 

டாக்டர் டைலோன் ரேண்டல் ( Dr.Dyllon Randall) எனும் நீர் தரம் பொறியியல் பிரிவு பேராசிரியர் மேற்பார்வையில் நடந்த ஆராய்ச்சியில் மனித சிறுநீரகத்தைப் பயன்படுத்தி இயற்கை செங்கல், மேலும் உரங்கள் என்று மனித சிறுநீரகத்தை சிறிதும் வீணாக்காமல் அதன் அனைத்து படிநிலைகளில் இருந்தும் ஒரு பொருள் என்று அறிவியல் உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றிருக்கின்றனர் ஆப்ரிக்கா கேப் டவுன் பல்கலைக்கழக மாணவர்கள்.

சிறுநீரில் இருந்து செங்கல் எப்படி என்பதன் விவரத்தைப் பார்ப்போம். உலர்ந்த மண்ணோடு சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு வகை பாக்டீரியாவை சேர்த்து இரசாயனக் கலவையை செய்யும்போது அதில் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து, அதில் இருக்கும் யூரியா தனியாகப் பிரிந்து கால்சியம் கார்பனேட் உற்பத்தியாகிறது. அது இறுதியாக செங்கல்போல் இறுகுகிறது. அதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த வடிவத்திற்கும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

bb

 

உலகம் முழுவதும் வெப்பமயம் ஆவதைப் பற்றி விவாதங்களும் கருத்தரங்குகளும் நடந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவமாகிறது. இதில் மிகமுக்கியமானது, இந்த செங்கல் எந்த அளவிற்கு இறுக்கமாக வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

சில வருடங்களுக்குமுன் அமெரிக்கா இதற்கான அடியை எடுத்து வைத்தது. ஆனால், அது முழுக்க செயற்கை முறையில் அமைந்தது. ஆனால் ஆப்ரிக்கா கேப் டவுன் பல்கலைக்கழக மாணவர்களின் தயாரிப்பு முழுக்க முழுக்க மனித சிறுநீரில் இருந்து இயற்கையான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலைத் தயாரிக்கும் செயல்முறையின்போது இதனுடன் சேர்ந்து கூடுதலாக இரண்டு துணைப் பொருள்களாக நைட்ரஜனும், பொட்டாசியமும் உருவாகிறது. இந்த இரண்டும் உரம் தயாரிப்பதில் முக்கிய மூலக்கூறுகளாக இருக்கின்றன.

 

bb

 

 

இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வையாளர் டைலோன் ரேண்டல், மனித சிறுநீரை திரவத் தங்கம் என்று குறிப்பிடுகிறார். மேலும் ஏன் அதை அப்படி குறிப்பிடுகிறார் என்பதன் விளக்கத்தையும் தருகிறார். இயற்கையாகவே மனித சிறுநீரில் 1%-க்கும் குறைவான தேவையற்ற நீர், 80% நைட்ரஜன், 56% பாஸ்ப்பரஸ் மற்றும் 63% பொட்டாசியம் இருக்கிறது என்று விவரிக்கிறார்.

இந்த கண்டுபிடிப்பிலே மிகமுக்கியமானது, இயற்கை செங்கலை உருவாக்கும் செயல்முறையில் முதலில் திட நிலை உரமும், அதன்பின் இயற்கை செங்கலும் மூன்றாவதாக திரவ நிலை உரமும் உற்பத்தியாகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒரு கண்டுபிடிப்பில் மூன்று பொருட்களும் மேலும் மூலப்பொருள் சிறிதும் வீணாகாமல் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதும் தனி சிறப்பு.    

 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மோசமான சாதனையில் யார் முதலிடம்? - போட்டி போட்ட இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Who on top for worst achievment India and South Africa team to compete

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. காயம் காரணமாக பவுமா விளையாடாத நிலையில், எல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். டாஸ் வென்ற எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் 2 ரன்னிலும், கேப்டன் எல்கர் 4 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஜொர்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பெடிங்காம் 12, வெர்ரெய்ன் 15 தவிர இரட்டை இலக்கத்தை தாண்டாமல் அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. 153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

- வெ.அருண்குமார்