Skip to main content

ஆப்பிரிக்கா வேர்; தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை என்ற ஊரில் வணிகப்பெருவழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம் வளர்ந்து வருகிறது. இதை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். 


மண்டபசாலையில் பிரமாண்டமான ஒரு மரம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். 


இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; ‘விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை கருப்பசாமி கோயில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்குப்பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளி மரம் ஆகும். ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை  இம்மரத்தின் சிறப்புகள். ஓராண்டில் ஆறு  மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் தண்டுகளில் தண்ணீரை சேமித்து வைக்கிறது.

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளது. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இம்மரத்து தண்டின் நடுவில் 10 பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இதன் உள்ளே செல்லவும் வழியுள்ளது. இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளது. இம்மரத்தை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம் போன்ற கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் இம்மரம் காணப்படுகிறது. தென்தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையும், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகளும் பல இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் சங்ககாலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர். 


அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி, இலங்கை மன்னார் உள்ளிட்ட பல இடங்களிலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பாரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள். 


மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. கேரளாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப்பெருவழியில் இவ்வூரிலும் தேரிருவேலி, அழகன்குளத்திலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் முத்துராஜா என்பவர் 5 அடி உயரத்திற்கு மரத்தைச் சுற்றி திண்டு கட்டிக் கொடுத்துள்ளதால் மரம் பாதுகாப்பாக உள்ளது. மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இம்மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.