Skip to main content

தாமரை தமிழகத்தில் கண்டிப்பாக மலரும்.... அதனால்தான் திமுகவினரும் தற்போது வேல் எடுத்துள்ளனர் - நடிகர் ராதாரவி பேச்சு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

gh

 

சென்னையில் கராத்தே தியாகராஜன் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். வழக்கமான முறையில் பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசியது வருமாறு, "நீண்டநாட்களாக பாஜகவில் சேருமாறு அண்ணன் பொன்னார் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்து வந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நானே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பேசுவதற்கு முன்பு இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் திமுக நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த நபர்கள் கடைசியாக வர வேண்டிய இடம் இதுதான். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது. முருகன் அவர்களை பாஜகவிற்கு அழைத்து வருவார். இந்த முருகன் பேரைத்தான் சீமான் தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதனால்தான் எங்களுடைய தலைவர் பேரும் கூட முருகன் என்று இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும், வந்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் வருகிறேன் என்று சொல்லியும், அண்ணா கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நான் அவரைப் பற்றி 10 நிமிடத்தில் என்ன பேச முடியும். 10 நிமிடத்தில் பேசக் கூடிய ஆளா அவர். கராத்தே தியாகராஜன் மட்டும் இல்லை என்றால், நான் சட்டமன்ற உறுப்பினரே ஆகி இருக்க முடியாது. அம்மா அவர்கள் இருக்கும்போது நான் தேர்லில் போட்டியிட்டபோது ஒரு குறிப்பிட்ட வார்டில் மா.சுப்பிரமணியன் அவர்கள் பலமாக ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். அம்மா அந்த வார்டை சொல்லி, ‘அந்தப் பகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். நான் மா.சுப்பிரமணியன் அங்கு பலமாக இருப்பதாக கூறினேன். அப்படியா என்று கேட்ட அம்மா, உடனடியாக அந்த பகுதிக்குக் கராத்தே தியாகராஜனை அனுப்பி வைத்தார். வேறு யாரும் அம்மா நினைவுக்கு வரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பகுதியில் தேர்தல் பணியைக் கவனிக்க போட்டார்கள். ஆனால் கராத்தே தியாகராஜனைப் பார்த்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ‘இவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள்’ என்று. அவர் எவ்வளவு மோசமோ அதை போல நானும் மோசமானவன். இந்த மோசமும், மோசமும் ஒன்னா சேர்ந்தால்தானே உருப்பட முடியும். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. 

 

இன்றைக்கு தாமரை மலராது என்று தொடர்ந்து சிலர் பேசி வருகிறார்கள். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலரும். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் தாமரை இல்லை என்று அர்த்தம் இல்லை. தண்ணீர் வருகின்றபோது தாமரை மேலே தெரியும். எனவே தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு திமுகவைப் பற்றி பயப்பட தேவையில்லை. நம்முடைய வேலையைப் பாதி திமுக தலைவரே செய்து கொண்டுள்ளார். யானை சாணம் போட்டால் லத்தி என்று சொல்லுவோம், மாடு போட்டால் சாணம் என்று சொல்லுவோம். ஆடு போட்டால் புழுக்கை என்று சொல்லுவோம். சாணி போடுவதிலேயே இவ்வளவு இருக்கிறது. அண்ணா யானை மாதிரி திமுகவை வைத்திருந்தார், ஆனால் தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. ஸ்டாலின் சொல்கிறார், ‘நாங்கள் பார்க்காத போலீசா’ என்று, நான் அவருக்குச் சொல்கிறேன், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதிகம் பேசினால் அவர்களும் தங்களுடைய வேலைகளைக் காட்டுவார்கள். உங்கள் அப்பாவிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும். எங்கள் தலைவர் வேல் எடுத்துக்கொண்டு சென்றதையடுத்து இன்றைக்கு வேலை இல்லாதவன் எல்லாம் வேல் எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்க முடியாது" என்றார்.

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.