Skip to main content

"தமிழின் முதல் உலக சினிமா" (வீடியோ)

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய திரைப்பட விருதுகள் - பெயர் மாற்றம்; பரிசுத் தொகை அதிகரிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
name and prize changed in national film awards

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் 1954ஆம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1984ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும், 1965ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது வழங்கப்பட்டு வருகின்றன. 

ad

இந்த நிலையில் இந்தாண்டு நடக்கவுள்ள 70வது தேசிய விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.  

தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை 'சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்' என்ற ஒரே விருதாக வழங்கப்படுகிறது. சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது. சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டு பரிசுத்தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த இசை இயக்கத்துக்கான விருது சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. 'சிறந்த குடும்ப படம்' என்ற விருது நீக்கப்பட்டு, 'சிறந்த திரைக்கதை' விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.

Next Story

மன்னிப்பு கடிதத்தோடு திரும்பி வந்த தேசிய விருது!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
National award returned with an apology letter!

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மணிகண்டன். இந்த படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். சினிமா சம்பந்தப்பட்ட வேலைக்காக மட்டும் சென்னைக்கு வருகிறவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில்நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கடந்த 8-ந் தேதி வியாழக்கிழமை இரவு அன்று மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடியிருக்கிறார்கள்.

இயக்குநர் மணிகண்டன் வேலை விசயமாக சென்னையில் இருந்த சமயத்தில், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக 1 லட்ச ரூபாய் ரொக்கத் தொகையும், 5 சவரன் நகையும் காணாமல் போயிருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதில் தேசிய விருதாக வழங்கிய பதக்கமும் அடங்கும்.

இந்நிலையில், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பை கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதை பரிசோதிக்கையில் தேசிய விருதுக்கான பதக்கங்களை திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்தோடு ஒரு கடிதத்தையும் வைத்துள்ளனர். அதில் “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதியிருக்கிறார்கள்.  பதக்கத்தையும் கடிதத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.