Skip to main content

"உங்கள் கண்களில் உள்ள மின்னலை நினைவில் கொள்வேன் சார்" - தனுஷ் பட நடிகை வேதனை!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
sfS

 

 

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் தனுஷின் அம்பிகாபதி பட நடிகை சுவாரா பாஸ்கர் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"உங்கள் புன்னகையின் அரவணைப்பையும், உங்கள் கண்களில் உள்ள மின்னலையும் நான் எப்போதும் நினைவில் கொள்வேன் நிஷி சார்! #DombiviliFast #MumbaiMeriJaan படங்களின்போது நடந்த உரையாடல்களுக்கு நன்றி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் நிஷிகாந்த் காமத்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நம் திட்டங்கள் முடிக்கப்படாமலே போய்விட்டது" - அபிஷேக் பச்சன் வருத்தம்!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
hrsgs

 

 

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அன்புள்ள நிஷி. நம் திட்டங்கள் முடிக்கப்படாமலே போய்விட்டது.... அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும். ??

 

 

Next Story

ஆண்டி என அழைத்த 4 வயது சிறுமி... திட்டித் தீர்த்த தனுஷ் பட நடிகை... கொந்தளித்த இணையவாசிகள்...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

தனுஷ் பாலிவுட்டில் முதன் முதலில் நடித்த படம் ராஞ்சனா. இந்த படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சோனம் கபூர், சுவாரா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்று வெளியானது.  
 

swara

 

 

சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் சுவரா பாஸ்கராக இருப்பார். அவர் எது பேசினாலும் சர்ச்சை, அறிவுரை கூறினாலும் சர்ச்சை என்று சுவாரா பாஸ்கரை சர்ச்சை துறத்திக்கொண்டே இருக்கும். அவரும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஒரு பிரபல நடிகை பொது மேடையில் அந்த கருத்தை தெரிவித்தால் சர்ச்சையாகும் என தெரிந்தும் அவர் யோசிக்காமல் கூறிவிடுவார். கேட்டால் நான் உண்மையாக இருக்கிறேன் என்பார். தற்போது தன்னை ஆண்டி என அழைத்த ஒரு நான்கு வயது குழந்தை நட்சத்திரத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக அவர் ஒரு விவாத மேடையில் கூறியது வைரலாகி வருகிறது.

ஹிந்தி மொழி சினிமா நிகழ்ச்சியான ‘சன் ஆஃப் அபிஸ்’நிகழ்ச்சியில் சுவரா பாஸ்கர் கலந்துகொண்டார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுவரா சோப்பு விளம்பரம் ஒன்றில் கலந்துகொண்டாராம். அப்போது அதில் தன்னுடன் நடித்த நான்கு வயது குழந்தை நட்சத்திரம் தன்னை ஆண்டி என அழைத்தது பிடிக்காமல், அந்த குழந்தையை வசைப்பாடினேன் என்று டிவி நிகழ்ச்சியில் தைரியமாக தெரிவித்துள்ளார்.
 

miga miga avasaram


இந்த விஷயம் அப்படியே சமூக வலைதளங்களில் சூடுபிடிக்க, அவர் பேசிய அந்த வீடியோ காட்சி மற்றும் வைரலாகி வந்தது. மேலும் சுவரா ஆண்டி என்று ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வந்தனர் இணையவாசிகள். இதுகுறித்து சுவரா பாஸ்கரிடம் கேட்டபோது, ‘நான் அந்த குழந்தையை நேரில் திட்டவில்லை, என் மனதில் அப்படி திட்டிக்கொண்டேன், அதைதான் அந்த நிகழ்ச்சியில் கூறினேன்’ என்று கூறினார். எப்படி ஒரு குழந்தையை இப்படி திட்ட இவருக்கு மனசு வந்தது இவர் ஒரு மனிதரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.