Skip to main content

"என் பிரச்சனைகளை அவர் பாத்துக்குறேன்னு சொன்னாரு,  ஆனா?" - நண்பர் மரணத்தால் கலங்கிப் போன சூரி 

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிறுவனர் சங்கரன் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் தூக்கிலிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த செய்தி அவரது ஆயிரக்கணக்கான மாணவர்களையும் அவரால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் மட்டுமல்லாது அவரைப் பற்றி அறிந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது நண்பர்களும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

sad soori



சங்கரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த நகைச்சுவை நடிகர் சூரி பலரும் எதிர்பாராத வகையில் மிகவும் கலங்கிப்போனார். "டைரக்டர் சற்குணம் திடீர்னு காலைல ஃபோன் பண்ணி சொன்னார், 'சங்கர் சார் இறந்துட்டாரு'னு. என்னால நம்பவே முடியல. 'என்னங்க சொல்றீங்க, நெஜமாத்தான் சொல்றீங்களா? உறுதியான தகவல்தானா?'னு திரும்பத் திரும்பக் கேட்டேன். ஏன்னா, அந்த அளவுக்கு மத்தவங்க பிரச்சனைக்கெல்லாம் தீர்வு தந்தவர், நம்பிக்கை தந்தவர் சங்கரண்ணன்.

எனக்கு சமீபத்தில் ஒரு பிரச்சனை வந்துச்சு. அதை யாருகிட்ட சொல்றதுன்னே தெரியல, என்னாலையும் அதை தீர்க்க முடியல. என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிஞ்ச அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சங்கர் சார் என்னைக் கூப்பிட்டு 'ஒன்னும் கவலைப்படாதீங்க, நமக்கு உதவ நிறைய பேர் இருக்காங்க. பாத்துக்கலாம்" என்று சொன்னார். நான் என் மனைவியிடம் நம்பிக்கையாகச் சொன்னேன், "சங்கரண்ணன் பேசுனாரு, கண்டிப்பா பிரச்சனை முடிஞ்சுடும்"னு. நான் அவர்கிட்ட பேசும்போதெல்லாம் சொல்லுவார், "நிறைய சம்பாரிச்சா ஒரு இலவச ஐஏஎஸ் சென்டர் ஆரம்பிங்க. முடியாத நம்ம பசங்க அதிகாரத்துக்கு வரணும்"னு. இப்படி எல்லாருக்கும் நல்லது, தைரியம் சொன்ன மனுஷன் இப்படி ஒரு முடிவு எடுப்பாருன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கல" என்று மிகுந்த சோகத்தோடு கூறினார். சோகத்திலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கிறார் சூரி.

 

sankar ias academy



மறைந்த சங்கரன் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். அவரது கல்லூரி கால கனவு சினிமாவில் நடிக்கவேண்டுமென்பதே. பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்தபின்னும் கூட அவரது ஆசை தீரவில்லை. சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த 'சண்டி வீரன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சங்கரன்.

 

                      

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய வாக்காளர்களுக்கு சூரி சொன்ன அறிவுரை

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
soori advise to first time voters

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார். 

அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார். 

உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.