Skip to main content

சர்கார் படத்தின் சிலிர்க்கவைக்கும் 'சிம்டாங்காரன்' பாடல் வெளியானது 

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
sarkar

 

 

 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான 'சர்கார்' படம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான 'சிம்டாங்காரன்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு முன்னர் அறிவித்தது. அதன்படி 'சிம்டாங்காரன்' சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக இப்பாடல் சன் குழுமத்தின் சன் நெக்ஸ்ட் ஆப் வாயிலாக மாலை 5 மணிக்கே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பெண் அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பாடல் வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யும் 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் உண்மையில் லாபமா...? நஷ்டமா...? - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல் 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijay

 

 

 

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  சென்னையில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம் என ஒரு வாரத்திற்கு முன்பு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பட லாபம், நஷ்டம் குறித்து பேசியபோது... "படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக போட்ட பணம் வந்திருக்கும். மேலும் சிலருக்கு லாபமும் கிடைத்திருக்கும். ஒரு எழுபதிலுருந்து என்பது சதவீதம் வரை  தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும். சொல்லப்போனால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை" என்றார்.

 

 

Next Story

கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
vijay

 

 

 

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை  கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.