Skip to main content

'இரவு தங்குங்கள்... நான் வந்ததே உங்களை பார்க்கத்தான்' - #MeToo வில் லட்சுமி ராமகிருஷ்ணன் 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
lakshmi ramakrishnan

 

திரைத்துறையை சார்ந்த பல்வேறு துறையினர் #MeToo மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறிவரும் நிலையில் தற்போது நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் #MeTooவில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதில்..."ஹரிஹரன் இயக்கிய 'பழசிராஜா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன். பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில் போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.

 

 

 

நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார். என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன். இப்போது சிலர், அவர் பெரிய ஆள் அவரை பற்றியெல்லாம் ‘மீடூ’ வில் பேசாதீர்கள் என்று சொன்னார்கள். நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும். பெரிய ஆட்கள் என்றால் அப்படி இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று சொல்லிகொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அன்றைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோய்விட்டது இல்லையா. அதனால் நான் பேசியே ஆகவேண்டும் என்று தான் இப்போது இதைச் சொல்கிறேன்" என்றார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பேப்பரில் மட்டும் இருக்க கூடாது" - மகளிர் இட ஒதுக்கீடு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

lakshmy ramakrishnan about women reservation

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் முதல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த நிலையில், முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய நாடாளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். அதில் கங்கனா ரணாவத், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா உள்ளிட்ட சில நடிகைகள் அழைப்பை ஏற்று புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்டனர். மேலும் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றனர். 

 

இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த மசோதா குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "ரொம்ப நல்ல விஷயம். அதெல்லாம் ஓகே. அது வெறும் பேப்பரில் இருந்தால் மட்டும் போதாது. அதாவது புலி, சிங்கம், கரடி எல்லாத்தையும் பேப்பரில் வரைஞ்சு வச்சிவிட்டு எங்க வீட்டில் இவையெல்லாம் இருக்கு என சொல்வதில் பிரயோஜனம் இல்லை. அது செயலில் இருக்க வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் பெண்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஒதுக்கீடு இருந்தது. ஆனால் அந்த மாவட்டத்தில் இருக்கிற ஆண்களோட மனைவிகள், சகோதரிகள் என நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் ஆண்கள் தான். அந்த மாதிரி இல்லாமல் நிஜமாகவே பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும். 

 

முடிவெடுக்க வேண்டிய இடத்துக்கு பெண்கள் வந்தால்தான் பெண்களோட பிரச்சனையை அவர்களின் கோணத்தில் இருந்து பார்க்க முடியும். ஒரு சில சமயங்களில் ஆண்களுக்கு இருக்கிற உணர்வு கூட பெண்களுக்கு இருப்பதில்லை. எனக்கு தெரிந்து, கடந்த வருஷத்தில் 16வயசு குழந்தை 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு அதிகாரி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் போது 6 கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடக்க வச்சு 4 மாடி ஏற வச்சிருக்காங்க. அந்த அதிகாரி ஒரு பெண். ஒரு வேலை ஒரு ஆண் அதிகாரியாக இருந்தால் அந்த பெண்ணை ஆட்டோவில் கூட்டி போயிருப்பார். அதனால் இது வந்து ஒரு ஆண், பெண் என்பது இல்லை. நம்முடைய மன எண்ணம் அப்படி இருக்கிறது. எனவே இந்த 33 சதவீதம் வருவது நல்ல விஷயம். ஆனால் அது சரியாக செயலில் இருக்குமா என்பதை இனிமே தான் பார்க்க வேண்டும்" என்றார். 

 

 

Next Story

"அவர் சடலத்தை பார்க்க எனக்கு ஷக்தி இல்லை" - லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

lakshmi ramakrishnan about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அவர் கூறுகையில், "முதலில் அவருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆறுதல் என்பதை விட பிரார்த்தனைகள் என்று தான் சொல்வேன். யுத்தம் செய் படத்தில் தான் அவர் எனக்கு பரீச்சயம். அவர் நடிப்பை பார்த்து வியந்து போய் ஆரோகணம் படத்தில் அவரை தேர்ந்தெடுத்தேன். 

 

அதன் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. பெரிய ஒரு நடிகராக பயணித்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு தடவையாச்சும் என்னையும், மிஷ்கினையும் கூப்பிட்டு நன்றி சொல்லுவார். எத்தனையோ நடிகர்களை பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலர் தான் தான் ஆரம்பிச்ச இடத்தை மனசில் வச்சிக்கிறது. அது ஒரு பெரிய விஷயம். அதே போல் அவர் ஒரு சிறந்த கலைஞர். மேலும் நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர். அவரிடம் ஏன் படம் இயக்குவதில்லை என கேட்டேன். ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்வது ஒரு குழந்தையை டெலிவர் பண்ற மாதிரி. அந்த கஷ்டத்தை அவர் அனுபவிச்சார். எனக்கு இன்னொரு பாதை வந்திருக்கு. அந்த பாதையில் நான் பயணிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்றார். 

 

அதை ரசிச்சி ரசிச்சு பண்ணுவார். ஒவ்வொரு தடவையும் ஒரு வண்டி வாங்கினாலும், வீடு கட்டினாலும் அதை ரசிச்சு என்னிடம் சொல்லுவார். வாழ்க்கையை ரசிச்சி ரசிச்சு வாழ்ந்த ஒரு மனிதர். இன்னும் 40, 50 வருஷம் பயணிக்க வேண்டிய ஒரு மனிதர். திடீர்னு ஒரு விஷயம் காணாமல் போனதாக ஒரு ஷாக்கில் தான் எல்லாரும் இருக்கிறோம். அவரை பார்க்க நான் போகமாட்டேன். அதற்கான தைரியம் என்னிடம் இல்லை. தனியாக இருந்து பிரார்த்தனை பண்ணுவேன். 5 வருஷத்தில் என்னுடைய அக்காவையும், அம்மாவையும், அண்ணனையும் இழந்தேன். அதன் பிறகு எனக்கு சடலத்தை பார்க்க ஷக்தி இல்லை" என்றார்.