Skip to main content

இயக்குனர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பு தொடங்கியது !

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
pa ranjith

 

 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை,  இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மற்றும் மகிழ்ச்சி ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 'கபாலி', 'காலா ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார். சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பை இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்த படத்துல நடிச்சதுக்கு நான் இன்னும் அவருக்கு காசு கொடுக்கல'' - பா.ரஞ்சித்

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான “இரண்டாம் உலகப்போரின் குண்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இப்படம் குறித்து பேசியபோது....  

 

pa ranjith

 

''எல்லோருடைய நம்பிக்கையாக நீலம் புரொடக்ஷன்ஸ் மாறவேண்டும் என்பது என் விருப்பம். உங்களுடைய ஆதரவோடு இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க உள்ளோம். எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் தயாரிக்க நிறைய பேர் எனக்கு உதவி செய்துள்ளனர். குறிப்பாக என்னுடன் சேர்ந்து கலை இயக்குனர் ராமலிங்கம், பாம்பே வேலன், லேன்பு வேல் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை குறித்த நேரத்தில், குறைவான செலவில் முடித்துக்கொடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த கலைஞர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

 

 

சில நடிகர்கள் குறைவான சம்பளம் வாங்கி நடித்துக்கொடுத்தனர். சொல்லப்போனால் நடிகர் ஜான் விஜய் இப்படத்தில் நடித்ததற்கு நான் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அவரும் இதுவரை காசு கேட்கவில்லை. இவரை போல படத்தில் நடித்த நடிகைகளும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். சொல்லக்கூடாத, சொல்லமுடியாத கதைகளை சொல்லத்தான் நாங்கள் சினிமாவிற்குள் நுழைந்தோம். அதுபோல் கதையம்சம் கொண்ட நல்ல நல்ல சமீபத்தில் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ன. குறிப்பாக அசுரன் மற்றும் கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது பலபேருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இதுபோன்ற நிறைய படங்களை இனி வரும் காலங்களில் தயாரிக்க உள்ளோம்'' என்றார்.

 

Next Story

நவம்பரில் வெளியாகும் பா.ரஞ்சித் படம் 

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

பரியேறும் பெருமாள் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித்தின்  தயாரிப்பில் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
 

iukg


தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு, கலை இயக்குனராக த.இராமலிங்கம், படத்தொகுப்பை செல்வா கவனிக்க விரைவில் இப்பட பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

puppy trailer

ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படம் வரும் நவம்பரில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

sss