Skip to main content

“இசைக்கு எல்லையில்லை” ; நன்றி அண்ணா - கோல்டன் குளோப் எமோஷ்னல் மொமண்ட்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Golden Globe 2023 emotional moment

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதன் காரணமாகத் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி. 

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது அமெரிக்காவில் நடைபெற இருந்தது. இந்த விருதுக்காக இறுதியாகப் பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் சிறந்த பாடல் பிரிவில் அப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தது. 

 

இந்நிலையில் தற்போது தேர்வில் வெற்றி பெற்று கோல்டன் குளோப் விருது ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்திருக்கிறது. அதை அவர் விழா மேடைக்குச் சென்று பெற்றுக்கொண்டார். இதற்கு ராஜமெளலி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் “பேச்சற்றிருக்கிறேன், இசைக்கு உண்மையில் எல்லைகள் தெரியாது. எனக்கு நாட்டு நாட்டு பாடல் கொடுத்ததற்கு வாழ்த்துகள் & நன்றி பெத்தண்ணா. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ரசிகரும் தங்கள் காலை அசைத்து அதைப் பிரபலமாக்கியதற்காக நான் நன்றி கூறுகிறேன்”. எனப் பதிவிட்டிருந்தார். மேலும், இசையமைப்பாளர் ரஹ்மான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹெய்மர்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
golden globe award 2024

சர்வதேச அளவில் புகழ்பெற்ற விருதும் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 81வது கோல்டன் குளோப் விருதும் நடந்து முடிந்துள்ளது. இதில் அதிக விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் - சிலியன் மர்ஃபி கூட்டணியில் வந்த ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வாங்கியுள்ளது. கோல்டன் குளோப் விருது வென்ற திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:

சிறந்த திரைப்படம் (டிராமா) - ஓப்பன்ஹெய்மர்
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்
சிறந்த திரைப்படம் (அனிமேஷன்) - ‘தி பாய் அண்ட் தி ஹெரோன்’
சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை - பார்பி
சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்ஃபி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)
சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த பாடல் - ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி)

Next Story

பிரதமர் மோடியை கிண்டல் செய்த மல்லிகார்ஜுன கார்கே; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

Mallikarjuna Kharge taunted PM Modi in Rajya Sabha

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' இரு படக்குழுவினருக்கும் மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது முதலில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆஸ்கர் விருது பெற்ற இருதரப்பினரை வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன். விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அது பெருமையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம் என்றோ, நாங்கள் தான் பாடல் எழுதினோம் என்றோ, நாங்கள் தான் கதை எழுதினோம் என்றோ, குறிப்பாக மோடிதான் இந்த படங்களை இயக்கினார் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு” என்றார். இது மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

அதன்பிறகு பேசிய நரசிம்ம ராவ், “ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் எடுத்த படம். அவர்களுக்கு விருது கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூற, அடுத்து பேசிய மதிமுக தலைவர் வைகோ, “தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.