Skip to main content

தனக்கேற்பட்ட விபத்து குறித்து தனுஷ் விளக்கம் 

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
dhanush

 

 

 

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் வில்லன் டோவினோ தாமசுடன் தனுஷ் மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கபட்டபோது யாரும் எதிர்பாராத விதமாக தனுஷின் வலது காலிலும், இடது கையிலும் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனே படக்குழுவினர் தனுஷுக்கு முதலுதவி செய்து பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து நடிகர் தனுஷ் காயம் குறித்து பரவலாக செய்திகள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். அதில்.... "அன்பார்ந்த ரசிகர்களே.. இது பெரிய காயம் எதுவும் இல்லை, நான் நலமுடன் இருக்கிறேன். ரசிகர்களின் அன்பு, வேண்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் தான் என் வலிமையான தூண்கள்" என பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

தனுஷ் காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? - கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
cdp

 

 

கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திலுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு  சாதனை படைத்தது. இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான், முதன்முதலில்  100 கோடி பேர் பார்த்து ரசித்தனர். அதன்பின் ஒன்றிரண்டு இந்தி பாடல்கள், இந்த சாதனையை படைத்துள்ளது.

 

ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களை கடந்ததன் மூலம், அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், 'காமன் டிபி' ஒன்றை வெளியிட்டது.

 

வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட காமன் டிபியில், தனுஷின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? என, சமூகவலைதளங்களில்  கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள், ரௌடி பேபி பாடலின் இச்சாதனைக்கு, சாய் பல்லவியின் சிறப்பான நடனமும் ஒரு காரணம். எனவே, அவருடைய புகைப்படமும், காமன் டிபியில் கண்டிப்பாக  இடம் பெற்றிருக்கவேண்டும் என கருத்துகளை பதிவிட்டு, கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.