Skip to main content

EXCLUSIVE : 2.0வில் அக்ஷய் குமார் கதாபாத்திரத்தின் பின்புலம் என்ன?

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்துவருகிறது. ஏற்கனவே 3Dயில் பிரம்மாண்டமாக வெளியான டீஸர் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பையும் எக்கச்சக்க மீம்ஸையும் பெற்றது. அந்த டீஸரின் அடிப்படையில் படத்தின் கதை குறித்தும் கதாபாத்திரங்கள் குறித்தும் பல்வேறு விதமான யூகங்கள் வந்தன. நாயகன் ரஜினிகாந்த்தின் வசீகரன் பாத்திரம் குறித்தும் 'சிட்டி' ரோபோ குறித்தும் நாம் அனைவரும் அறிந்ததே. அதனால்,  வில்லன் அக்ஷய் குமார் பாத்திரம் குறித்துதான் அதிக யூகங்கள் நிலவின.

 

akshay kumar



இன்று (03-11-2018) இன்னும் சற்று நேரத்தில் ட்ரைலர் வெளியாகவிருக்கும் நிலையில், 2.0 டீமில் இருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி, வில்லன் அக்ஷய்குமார் ஒரு 'ஆர்ணித்தாலஜி' ப்ரோஃபஸ்ஸர். ஆர்ணித்தாலஜியா? அப்படியென்றால்? பறவைகள் குறித்த படிப்புக்கான பெயர்தான் ஆர்ணித்தாலஜி. படத்தில் பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செல்போன் டவர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்று கேப்ஷன் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, அக்ஷய் குமார் பாத்திரம் பறவைகள் படிப்புக்கான பேராசிரியராக இருக்க வாய்ப்புகள் அதிகம். பறவைகள் மீதான அன்பால், மக்களின் செல்போன்களை பறக்க விடுகிறாரோ என்னவோ? படம் வந்தால் தெரியும், படம் தொடங்கப்பட்டபோது இருந்த இந்தப் பாத்திரப்படைப்பு இருக்கிறதா, இல்லை ஏதேனும் மாற்றம் கண்டிருக்கிறதா என்று.  

 

    

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.