Skip to main content

பொய்யை உண்மையாக்க பேராசிரியர் செய்த காரியம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 17

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Detective Malathi's Investigation: 17

 

ஒரு தவறான பேராசிரியர் வழக்கு குறித்து, முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில் அவளைத் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டார் கணவர். இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. மீண்டும் வந்து கணவர் அழைத்துச் செல்வார் எனப் பெண் வீட்டில் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வராமல் சைக்கோ போல் நடந்துகொண்டார். அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர். அவரோடு இனி வாழ முடியாது என விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தனர். கோர்ட்டில் வந்து தான் தற்போது எந்தப் பணியிலும் இல்லை என்று அவர் பொய் சொன்னார்.

 

நீதிமன்றத்துக்கு ஆதாரம் தேவை. அந்த மனிதருக்கு இன்னொரு குடும்பமும் குழந்தையும் இருந்தது விசாரணையில் தெரிந்தது. அந்தக் குடும்பத்தோடு அவனுக்கு ரேஷன் கார்டே இருந்தது. அவனுடைய குடும்பத்திடம் அப்போதைக்கு நாங்கள் அந்த உண்மையைச் சொல்லவில்லை. அவன் செல்லும் இடங்களில் போட்டோ எடுத்தோம். அதன் பிறகு அவனுடைய குடும்பத்தினரிடம் நாங்கள் உண்மையைத் தெரிவித்தபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்தும் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் அவன் கைது செய்யப்பட்டான்.

 

தன்னைப் போலீசார் கொலை செய்ய வருகின்றனர் என்று அவன் தரையில் படுத்து உருண்டு டிராமா செய்தான். ஆனாலும் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனுடைய அண்ணா பல்கலைக்கழக பணி குறித்த ஆதாரங்களும் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தன. தன்னுடைய குடும்பத்துக்கு பணம் கொடுக்கக் கூடாது என்கிற காரணத்திற்காக அவன் தன்னுடைய பணியையே ராஜினாமா செய்தான். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்று இந்த வழக்கு என்னை யோசிக்க வைத்தது. 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பது பெரிய விஷயம். குடும்பத்துக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அதையே அவன் ராஜினாமா செய்தான். இதுபோன்ற ஒரு தவறான ஆசிரியர் தன் வேலையை ராஜினாமா செய்தது ஒரு வகையில் எனக்கு சந்தோஷம்தான். மாணவர்கள் ஒரு தவறான ஆசிரியரிடமிருந்து தப்பித்தனர் என்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. இதுபோன்ற வழக்குகளில் எங்களுடைய துப்பறியும் பணி நீதித்துறைக்கும் பயன் தருவதாக அமையும்.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.