Skip to main content

முதல் பந்தே சிக்ஸர்... ஃபார்முக்கு திரும்புவாரா யுவராஜ் சிங்? 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

2014 மற்றும் 2015 ஐ.பி.எல். சீசனுக்கான ஏலங்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். ஆனால் இந்த வருட ஐ.பி.எல். ஏலத்தின் முதல் சுற்றில் அடிப்படை விலைக்குக் கூட அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இறுதி சுற்றுகளில்மும்பை அணி அடிப்படை விலைக்கு எடுத்தது.
 

yuvi

 

 

கடந்த 4 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் பெரியளவில் பங்களிக்க முடியாமல் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் யுவராஜ் சிங். இந்த ஆண்டு மும்பை அணிக்கு விளையாடவுள்ள நிலையில் அவர் விளையாடும் 6-வது ஐ.பி.எல். அணியாக மும்பை இந்தியன்ஸ்அணி உள்ளது.
 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றது முதல் தொடர்ந்து யுவராஜ் சிங் அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

இந்திய அணி 2007 டி20 மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள்உலகக்கோப்பைகளை வென்றபோது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் யுவராஜ். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கேன்சர் நோய் தீவிரமடைந்த நிலையிலும் நாட்டிற்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று காட்டியவர். 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் நிரந்தரமாக விளையாடவில்லை. 2017-ஆம் ஆண்டு 11 ஒருநாள்போட்டிகளில் விளையாடி 372 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்சராசரி 41.33 என்பது கவனிக்கத்தக்கது.
 

இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் இல்லாதது அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங்,விக்கெட்களை எடுக்கும் ஸ்பின் பவுலிங், மாஸ் பீல்டிங் என மூன்றிலும் கலக்கும் இவரைப் போல ஒரு வீரர் இந்திய அணிக்கு அவசியத் தேவையாக உள்ளது. பிட்னஸ், வயது, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் உள்ளிட்ட காரணங்களால் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்து வருகிறார். 
 

ஐ.பி.எல். தொடருக்கு மும்பை அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியாளரான ராபின் சிங் மும்பை அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான குருணல் பாண்டியாவிற்கு பயிற்சியின்போது 3 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற டார்கெட் கொடுத்தார். முதல் பந்து சரியாக படவில்லை. அந்த பந்தை லெக் சைடில் திருப்பி விட்டார். அடுத்த இரண்டு பந்துகளில் தனது ஆட்டபாணியில் 2 சிக்ஸர்கள் அடித்து ராபின் சிங் விடுத்த பயிற்சியின் சவாலில் வெற்றி பெற்றார் குருணல்.
 

மும்பை அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் குருணல் பொறுமையாகவும், அதிரடியாகவும் ஆடும் திறமை உடையவர். 3 பந்துகளுக்கு 10 ரன்கள் போன்ற சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கேற்ப ஒரு டார்கெட் கொடுத்து குருணல் பாண்டியாவை பலவிதமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயார் செய்து வருகிறார் ராபின் சிங். குருணல் பாண்டியாவின் ரோல் மாடல் யுவராஜ் சிங். ஐ.பி.எல். போட்டிகளில்இருவரும் ஒரே அணியில் முதல்முறையாக ஆடவுள்ளனர்.  


 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

ஐ.பி.எல். இறுதிப் போட்டி; வெளியான முக்கிய தகவல்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
IPL Finals; Important information released

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.