Skip to main content

கொல காண்டுல இம்ரான் தாஹிர்... சீமை ரொட்டி பார்சல் கேட்ட சி.எஸ்.கே; ட்விட்டர் அலப்பறைகள்...

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

gfhgfhgf

 

வரும் மார்ச் 23 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதல் ஆட்டமே சென்னை, பெங்களூருக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே சமூகவலைதளங்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் தமிழில் ஒரு ட்வீட் செய்திருந்தார், அதற்கு சிஎஸ்கே அணி திரும்ப ரிப்ளை செய்தது. இந்த இரண்டு ட்வீட்டுகளும் சமூகவலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதில் முதலில் இம்ரான் தாஹிர், 'என் இனிய தமிழ் மக்களே நலமா? களம் இறங்குகிறோம் மார்ச் 23. நமது கோட்டையில். வந்தோம், வென்றோம், சென்றோம். திரும்ப வர்றோம், வெல்வோம். இந்த வருஷம் எங்க காளியோட ஆட்டத்தை பார்ப்பிங்க. கொல காண்டுல வர்றோம், செண்டிமெண்ட் உள்ளவன் எல்லாம் ஓடிடு' என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிஎஸ்கே, 'நலம். நலமறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது? தென் ஆப்பிரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? தம்பி இங்கிடி சவுக்கியமா? வரும்போது சீமை ரொட்டியும், மிட்டாயும் வாங்கி வரவும்' என பதிலளித்தது. இந்த உரையாடலை இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.  

 

 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.