Skip to main content

பரபரப்புக்கு மட்டுமல்ல; சாதனைகளுக்கும் பஞ்சமில்லா சென்னை vs கொல்கத்தா போட்டி!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

csk vs kkr

 

ஐபிஎல் தொடரில் நேற்று (21.04.2021) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு  220 ரன்களைக் குவித்தது. ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்தார் டு பிளெஸிஸ்.

 

221 ரன்களை வெற்றி இலக்காக வைத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, முதல் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தது. இதனால் சென்னை அணி எளிதாக போட்டியை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஸ்ஸலும் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆடத் துவங்கினர். ஒருகட்டத்தில் இவர்கள் அதிரடியால் ஆட்டம் கொல்கத்தா அணிக்குச் சாதகமாக திரும்புவது போல் இருந்தது. ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சென்னைக்கு வெற்றி உறுதி என ரசிகர்கள் நினைத்த நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ், சென்னை பந்துவீச்சாளர்களை விளாச துவங்கினார். சாம் கரனின் ஒரே ஒவரில் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களைக் குவித்தார். ஆனாலும் மறுபுறத்தில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரஷித் கிருஷ்ணா கடைசி விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். இதனால் சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது.

 

இந்தப் பரபரப்பான போட்டி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில், ஹாட் ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைனுக்கு எதிராக தோனி தனது முதல் பவுண்டரியை நேற்றைய போட்டியில் பதிவு செய்தார். 2012ஆம் ஆண்டிலிருந்து தோனி, நரைனின் 64 பந்துகளை எதிர்கொண்டிருந்தாலும் அவர் ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை. 65வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்துள்ளார்.

 

இந்தப் போட்டியில் 31 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, அதன்பிறகு 171 ரன்களைக் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு, ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். ஒட்டுமொத்த இருபது ஓவர் போட்டிகளில் இது இரண்டாவது அதிகபட்சமாகும்.

 

கம்மின்ஸ் நம்பர் 8இல் இறங்கி அடித்த 66 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் நம்பர் 8 அல்லது அதற்கும் கீழ் இறங்கிய வீரர்களால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் ஹர்பஜன் சிங் 8வது வீரராக 64 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. கொல்கத்தா அணி அடித்த 202 ரன்கள்தான், ஐபிஎல் வரலாற்றில் ஆல்-அவுட் ஆன அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அடித்த 188 ரன்களே ஆல்-அவுட் ஆன அணி அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது. 

 

தீபக் சாஹர் முதல் ஆறு ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை பந்துவீச்சாளர் ஒருவர் முதல் பவர்-பிளேவுக்குள் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல்முறை. சாம் கரன் தனது நான்கு ஓவர்களில் 58 ரன்கள் வாரி வழங்கினார். சென்னை அணி பந்துவீச்சாளர் ஒருவர் அளித்த அதிக ரன்கள் இதுவாகும். மோஹித் ஷர்மாவும் சென்னை அணிக்காக விளையாடும்போது, நான்கு ஓவர்களில் 58 ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கவாஸ்கரின் வேண்டுகோளும் தோனியின் செயலும்; சேப்பாக்கத்தில் நெகிழ்ச்சி

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

sunil kavaskar asked dhoni autograph chepauk stadium 

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் (14.05.2023) மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களையும் டிவோன் கான்வே 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 145 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களையும் ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.

 

மேலும் இந்த போட்டியானது சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கும் கடைசி லீக் போட்டியாகவும் அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியும், சென்னை அணியைச் சேர்ந்த மற்ற வீரர்களும் சென்னை அணியின் கொடியை கைகளில் ஏந்தியவாறு மைதானத்தை சுற்றிலும் வலம் வந்து கிரிக்கெட் பந்துகளை ரசிகர்களுக்கு வழங்கி அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

sunil kavaskar asked dhoni autograph chepauk stadium 

 

அப்போது மைதானத்தில் போட்டி குறித்து வர்ணித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் திடீரென சற்று தூரத்தில் இருந்து ஓடி வந்து தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டார். அதனைத் தொடர்ந்து தோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். அதன் பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இவர்களின் இந்த செயலானது போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடியது இவைகளைத்தான் - ரீவைண்ட் 2021

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

இரண்டும் இரண்டும் எவ்வளவுன்னு கேட்டாலே ஃபோனில் கால்குலேட்டரை ஓப்பன் செய்யும் நாம், எந்த சந்தேகம் வந்தாலும் முதலில் திறப்பது கூகுளைத்தான். கூகுளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அதன் பயன்பாட்டை ஏகத்துக்கு உயர்த்தியுள்ளது. எல்லா வகையான தகவல்களையும் மக்கள் கூகுளில் தேடும் நிலையில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவ்வாண்டில் அதிகம் தேடப்பட்டவை என்ன என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ல் இந்தியர்களால் அதிகமாக தேடப்பட்டவைகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது கூகுள். கூகுளின் புள்ளிவிவரப்படி 2021 -ல்  இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியவை என்ன என்பதை பார்ப்போம்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவை (பொதுவானவை)

இளந்தலைமுறை அதிகமாக இருக்கும் இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட் மோகம் கொஞ்சம் அதிகம் தான். அதிலும் ஐ.பி.எல். என்றால் சொல்லவே வேண்டாம். கரோனாவால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட்டது. ரொம்ப தொலைவில் தொடர் நடந்ததாலோ என்னவோ நம்ம ஆளுங்க கிரிக்கெட்டை அதிகமாக தேடிட்டாங்க போல. இதனால், இப்பட்டியலில் முதலிடத்தை ஐ.பி.எல். தொடர் பிடித்துக்கொண்டது. அதேபோல, மூன்றாவது இடத்தை டி20 உலக கோப்பை பிடித்தது. கோவிட் தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின் இப்பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக யூரோ கோப்பை கால்பந்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோபா அமெரிக்க தொடர் ஆகியவை முறையே நான்கு, ஐந்து மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் கோவிட் தடுப்பூசியும், ஏழாவது இடத்தில ஃப்ரீ ஃபயர் மொபைல் கேமும் இடம்பிடித்துள்ளன. இவை மட்டமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பற்றியும் இந்தியர்கள் அதிகளவில் தேடியுள்ளார். இதன் காரணமாக, இப்பட்டியலில் அவரது பெயர் ஒன்பதாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இப்படி சாதனை இளைஞரை பற்றி தேடியது போலவே சர்ச்சை இளைஞரான ஆர்யன் கானையும் 2021 -ல் மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளார். இதன் காரணமாக அவரும் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

எனக்கு அருகில் இருக்கும்...

2020 -ல் மரண பயத்தை காட்டிய கரோனா 2021 -ல் மெல்ல குறைந்துவிடும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்தபோது, மார்ச் மாதத்தில் பரவ தொடங்கியது அதன் இரண்டாவது அலை. புதிய திரிபுகள், அதிகரித்த பரவல் என மக்களை மீண்டும் ஆட்டுவித்தது கரோனா. இதன் காரணமாக இந்த ஆண்டு ‘எனக்கு அருகில்’ (Near Me) தேடல்கள் பெரும்பாலும் கரோனா தொற்று தொடர்பான சேவைகளைச் சுற்றியே இருந்தன. தடுப்பூசிகள், கோவிட் சோதனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எங்கு கிடைக்கும், கோவிட் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் CT ஸ்கேன்கள் ஆகியவை அதிகம் தேடப்பட்ட இடங்கள் பட்டியலில் முறையே 1,2,4,5,7 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இவற்றிற்கிடையே உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி குறித்த தேடல்கள் மூன்று மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. டிரைவிங் ஸ்கூல் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்...

2021ஆம் ஆண்டு இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா. இந்திய ராணுவத்தின் தரைப்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ரா, இதற்கு முன் பல போட்டிகளில் பற்பல பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் அவர் அடித்த தங்கம் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆவாரை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது எனலாம். பதக்கம் வென்ற நாளிலிருந்து இவரை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் செய்த இந்தியர்கள் இவரது சமூக வலைதள கணக்கையும் அதிகளவில் பின்தொடர துவங்கினர். இவருக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இருப்பவர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் வழக்கில் கைதான இவர் அதன் காரணமாக இவ்வாண்டு கூகுளிலும் அதிகம் தேடப்பட்டார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை நடிகை ஷெனாஸ் கில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், நடிகர் விக்கி கொளசல், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, சுஷில் குமார் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் பிடித்துள்ளனர்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட படங்கள்...

இந்தியர்களின் உணர்விலிருந்து என்றைக்குமே பிரிக்க முடியாத ஒரு விஷயம் என்றால் அது சினிமா தான். வீக்எண்ட் என்றாலும் சரி, விசேஷம் என்றாலும் சரி, நமக்கு முதலில் மனதில் உதிக்கும் பொழுதுபோக்கு சினிமா தான். இப்படிப்பட்ட சினிமா இவ்வாண்டில் திரையரங்குகளை கடந்து ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்றது எனலாம். 2021 -ல் கரோனா பரவலால் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், அதிக அளவிலான படங்கள் ஓடிடி -யிலும் வெளியானது. இப்படி வெளியான திரைப்படங்களில் மக்கள் அதிகம் தேடியது எந்த படம் என்பது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட தவறவில்லை. அதன்படி, சூர்யா நடித்த ஜெய் பீம் படம்தான் இந்த ஆண்டு மக்களால் அதிகம் தேடப்பட்ட படமாக இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஓடிடி -யில் ரிலீஸ் ஆகி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தே ஆகணுமே என ரசிகர்களை ஏங்கவைத்த ஒரு படமென்றே இதனை சொல்லலாம். இதேபட்டியலில் இன்னொரு தமிழ் படமும் உள்ளது. ஜெய் பீம் படத்துக்கு மாறாக தியேட்டரில் வெளியாகி ரசிகர்களால் விசில் பறக்க கொண்டாடி பார்க்கப்பட்ட மாஸ்டர் தான் அந்த படம். மாஸ்டர் இப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர ஷெர்ஷா, ராதே, பெல் பாட்டம், எடர்னல்ஸ் ஆகிய படங்கள் முறையே இரண்டு முதல் ஐந்தாவது இடங்கள் வரை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்...

2020 ஆம் ஆண்டில் கரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீட்டிலேயே முடங்கியிருக்க, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் கூட தள்ளிவைக்கப்பட்டன. இதனால் 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல விளையாட்டு நிகழ்வுகள் 2021 -ல் நடந்தன. அதிலும் பல தொடர்களில் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் கடந்துதான் இவ்வாண்டு நடைபெற்ற பல தொடர்கள் விளையாட்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்தன. கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக், பராலிம்பிக் என பல போட்டிகள் இந்த ஆண்டில் வரிசையாக நடைபெற்றது. இதில் இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டது ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தான். இவற்றிற்கடுத்து, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்ச் ஓபன், லா லிகா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

என்னவா இருக்கும்...?


எதாவது ஒரு  புது பெயரையோ, நிகழ்வையோ கேள்விப்படும்போது அதை பற்றி எப்படியாவது உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் மக்களிடையே அதிகம். அப்படி அவர்களின் கேள்வி ஆர்வத்திற்கு தீனி போடுவதில் முக்கிய பங்கு கூகுளுக்கு தான். அப்படி எந்த விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் கூகுளில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலில் கருப்பு பூஞ்சை முதலிடம் பிடிக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன.? என்ற கேள்வியே இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட கேள்வியாக உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களை, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது..? தலிபான் என்றால் என்ன..? ரெம்டெசிவிர் என்றால் என்ன..? ஸ்டெராய்டு என்றால் என்ன..? ஸ்க்விட் கேம் என்றால் என்ன..? போன்ற கேள்விகள் பிடித்துள்ளன.

 

fadf

 

அதிகம் தேடப்பட்ட செய்திகள்...

ஊடகம் என்பது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், செய்தித்தாள் படிக்கும் தலைமுறையும், தொலைக்காட்சிகளில் செய்தி பார்க்கும் தலைமுறையும் கூட ஏதேனும் ஒரு செய்தியின் சமீபத்திய அப்டேட்டை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் உடனடியாக செல்லும் இடம் கூகுள் தான். அப்படி மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் முதலிடத்தை பிடித்துள்ளது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். இதற்கடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தானை பற்றிய செய்திகள், மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகள் பிடிக்கின்றன. மேலும், ஊரடங்கு குறித்த செய்திகள், சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியது, விவசாய போராட்டம் ஆகியவையும் இப்பட்டியலின் டாப் 10 -ல் வருகின்றன.