Skip to main content

சீனாவில் நடைபெற்ற மூத்தோருக்கான தடகள போட்டியில்: 3 பதக்கங்களை வென்று சுப்பையா காந்தி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
சீனாவில் நடைபெற்ற மூத்தோருக்கான தடகள போட்டியில்: 
3 பதக்கங்களை வென்று சுப்பையா காந்தி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுப்பையா காந்தி, 65 வயது முதல் மூத்தோருக்கான சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 12 பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மாதம் சீனாவில், ஆசிய அளவில் 75-79 வயது பிரிவுகளில் நடைபெற்ற தடகள போட்டியில், குண்டு எறிதலில் தங்கம் பதக்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கல பதக்கத்தை சுப்பையா காந்தி வென்றுள்ளார். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற நாடுகள் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இந்தியாவும் கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என்று சுப்பையா காந்தி குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்