Skip to main content

ஒரே நாளில் உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுமி... புதிய வரலாற்றுச் சாதனை...

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

15 வயது பள்ளி மாணவி, ஒரே நாளில் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

 

15 year old school kid defeated venus williams in wimbledon tennis

 

 

15 வயது பள்ளிச் சிறுமி கோரி காஃப், விளம்பிள்டன் தொடரில் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளார். லண்டனில் தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ், கோரி காஃப்பை எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கோரி காஃப் வெற்றி பெற்று வீனஸுக்கு மட்டுமின்றி, உலக டென்னிஸ் ரசிகர்களுக்கே அதிர்ச்சியளித்தார். இந்த ஆட்டத்தின் போது தரவரிசையில் 310 ஆவது இடத்தில் இருந்த கோரி காஃப், இந்த வெற்றியால், தரவரிசையில் 215 ஆவது இடத்திற்கு முன்னேறுவார்.

இந்த வெற்றி குறித்து கோரி காஃப் கூறுகையில், " நான் வெற்றியடைந்த பின் வில்லியம்ஸ் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நானும் அவரிடம் நன்றி தெரிவித்தேன். இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. ஒரு போட்டியில் வென்றபின், நான் அழுதது இதுதான் முதல் முறை. என்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. நான் வீனஸ் வில்லியம்ஸுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போதும் மிகுந்த உற்சாகமடைந்தேன். ஆனால், எனக்கு நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டேன். வெற்றி பெற்ற பின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை இரட்டை புற்றுநோயால் பாதிப்பு

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

18 Grand Slam winning tennis player with double cancer

 

டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர் மார்டினா நவ்ரதிலோவா. தற்போது 66 வயதாகும் மார்டினா டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவருக்குத் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

 

தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சையினைத் துவங்கியபோது மார்பகத்திலும் புற்றுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து மார்டினாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது, “மார்டினாவிற்கு கண்டறியப்பட்ட இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் குணப்படுத்தக் கூடியதுதான் எனக் கூறியுள்ளனர். 

 

இந்நிலையில் இது குறித்து மார்டினா கூறுகையில், “இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளன. வலி தீவிரமானது என்றாலும் சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என நம்புகிறேன். இந்த நோயையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார். 2010ல் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளுக்கும் சோகமான தினம்

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

A sad day for all sports around the world

 

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

 

ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானதாகவும் அதில் இருந்து மீண்டு வர கடுமையாக போராடியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக 2022 லேவர் கோப்பையுடன் ஓய்வு பெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

2003ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் தற்போது வரை 6 ஆஸ்திரேலிய ஓபன் 8 விம்பிள்டன் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார்.

 

ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்ததற்கு ரஃபேல் நடால் தனது வருத்தத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், அதில், “இந்த நாள் வரக்கூடாது என தான் விரும்பியதாகவும் இந்த நாள் எனக்கும் உலகம் முழுதும் உள்ள விளையாட்டுகள் அனைத்திற்கும் சோகமான நாள். களத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.