Skip to main content

சிறுநீர் கசிவை தடுக்கும் வழிமுறைகள்  -  டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

 Ways to Prevent Urine Leakage - Explained by Dr. Srikala Prasad

 

பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கிற உடல் சிக்கலான சிறுநீர் கசிவு பற்றி அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேராசிரியரும் மருத்துவருமான ஸ்ரீகலா பிரசாத் விவரிக்கிறார்.

 

வயிறுக்கு அழுத்தம் அதிகமாகக் கொடுக்கும்போது பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்படும். மனம்விட்டு சிரிக்கும்போதும் இந்தப் பிரச்சனை ஏற்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் முன் இந்தப் பிரச்சனை ஏற்படுவது சங்கடத்தை ஏற்படுத்தும். சுகப்பிரசவம் நடந்த பெண்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களாலும் இது நடக்கிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களை நாம் முழுமையாக ஸ்கேன் செய்கிறோம். 

 

முழுமையான பரிசோதனைக்குப் பிறகு சிலருக்கு இதற்கான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிவோம். உடல் பருமனைக் குறைத்தாலே இந்தப் பிரச்சனை சரியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது அறுவை சிகிச்சை தேவையில்லை. பிரசவத்திற்கு முன்பே சில சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறுநீர் கசிவு ஏற்படாமல் தடுக்கலாம். ஆனால் வேலைப்பளு காரணமாகப் பலர் இதைச் செய்வதில்லை. அந்தப் பயிற்சியைக் காலையில் பால் காய்ச்சும்போது கூட தினமும் செய்யலாம். 

 

பிறப்புறுப்பை இழுத்துப் பிடித்து ஐந்து வரை எண்ண வேண்டும். இதில் மூச்சு விடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்திலும் செய்யக்கூடிய பயிற்சி இது. கல்யாணமான புதிதிலிருந்தே இதைச் செய்யலாம். சிறுநீர் கசிவு ஏற்படும் நேரத்திலும் இதைச் செய்து கசிவைத் தடுக்கலாம்.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.