Skip to main content

உடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020


மாதுளை பழத்தை போன்று புத்தணர்வு அளிக்கும் பழம் வேறொன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதில் நிறைய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றது.  மாதுளை பழத்திற்கு மாதுளங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.  அனைத்தையும் சீராக்குபவன் என்ற அடிப்படையில் மாதுளைக்கு இந்த பெயர் வந்ததாக கூறுகிறார்கள். உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் மாதுளை பழங்களில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாதுளையின் பழம், பட்டை, பூ முதலானவைகளும் உடலுக்கு நன்மை தரும். புளிப்பு மாதுளையை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு உடனடியாக குறையும். ரத்த போக்கினை சீராக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. சிறுநீரை சீராக வெளியேற்றும் தன்னை இந்த பழத்திற்கு மிக அதிகம். இதயத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க கூடியது. 
 

gk



மாதுளை பழத்தில் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு, கால்சியம் ஆகியவை சரிசமமான அளவில் இருக்கின்றது.நோய் எதிர்ப்பு சக்தியினை மற்ற பழங்களை விட விரைவாக அதிகரிக்கும் தன்மை உடையது. இனிப்பு மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தத்தை போக்கும். வரட்டு இருமலை அடியோடு நிறுத்தும் ஆற்றலை மாதுளை பெற்றிருக்கிறது. மாதுளை விதைகளை பொடியாக்கி பாலுடன் கலந்து சாப்பிட்டால் மேக நோயினால் ஏற்பட்ட பாதிப்பு குறைகின்றது. நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் சிறிதுசிறிதாக குறைக்கிறது. உடல் எடை கூடுவதற்கு மாதுளை அருமருந்தாகும். ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பொருட்கள் பசியினை தூண்டும் ஆற்றல் கொண்டது. வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் மாதுளை பயன்படுகின்றது.

 


 


 

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

Next Story

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக விளக்கம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

dmdk explains about Vijayakanth's health

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகத் தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.