Skip to main content

மலச்சிக்கல் தான் மூல நோய்க்கு முக்கியக் காரணமா? - விளக்குகிறார் டாக்டர் கண்ணன்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Is constipation the main cause of hemorrhoids? - explains Dr. Kannan

 

மூல நோய் குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் டாக்டர் கண்ணன் விளக்குகிறார்.

 

மூலத்திற்கான மிக முக்கியமான காரணம் மலச்சிக்கல். மலச்சிக்கலுக்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள். நகரங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ செய்யும் வேலைகள் தான் இன்று அதிகம். ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வார்கள். ஓட்டுநர்களுக்கும் இதே நிலைமைதான். இவர்களுக்கெல்லாம் மூலம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அது முதலில் மலச்சிக்கலில் ஆரம்பிக்கும். 

 

காய்கறிகள், பழங்களை அதிகம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் வரும். பாட்டில்களில் விற்கும் ஜூஸ்களையும் குடிக்கக் கூடாது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும். நகரங்களில் நார்ச்சத்து குறைவான உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். மன அழுத்தமும், மலச்சிக்கலுக்கு முக்கியமான காரணம். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். டாய்லெட்டை அதிகம் பயன்படுத்தினாலும் மூலம் ஏற்பட வாய்ப்புண்டு. 

 

அதிக மசாலா சேர்த்த உணவுகளை உண்ணுவதாலும் மலச்சிக்கல் ஏற்படும். தினமும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். உணவில் மோர், தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் நிம்மதியான தூக்கம் வேண்டும். நோயாளிகளின் வரலாற்றை முதலில் நாங்கள் ஆய்வு செய்வோம். ஆசனவாயில் வீக்கம் அல்லது அல்சர் இருக்கிறதா என்று பார்ப்போம். குடலில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்று பார்ப்போம். குடலில் கட்டி இருந்தாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். அதற்கான சிகிச்சையை நாங்கள் வழங்குவோம்.

 

வயதானவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வோம். லேசர் டெக்னிக்கைப் பயன்படுத்தி மூலத்தை குணப்படுத்த முடியும். மூலத்திற்கென்று பிரத்தியேக கருவிகள் உள்ளது அதைக் கொண்டு குணப்படுத்தலாம். நோயாளிக்கு வலி ஏற்படாமல் சிகிச்சையை வழங்க முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்களில் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம். மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம். அதன் மூலம் மூல நோய் வராமல் தடுக்கலாம்.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.