Skip to main content

மனச்சிதைவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா? - விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

  Can mental disease be completely cured? - explains psychiatrist Poorna Chandrika

 

மனச்சிதைவு நோயை குணப்படுத்தும் முறைகள் குறித்து நமக்கு டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.

 

மனச்சிதைவு நோய் நம்மைச் சுற்றியுள்ள ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன் முதலில் ஒரு ஷாக் ஏற்படும். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையும் இப்போதைய நிலையும் வேறு. இப்போது இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவரை கூட இருந்து கவனித்துக்கொள்ளும் முறை என்பது வெளிநாடுகளை விட இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் மனநலப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

 

சர்க்கரை நோய்க்கு எப்படி நாம் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதுபோல மனச்சிதைவு நோய்க்கும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வந்தால் அது கட்டுப்பாட்டில் இருக்கும். வாக்கிங் செல்லுதல், சரியான தூக்கம் உள்ளிட்ட சில ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளையும், தெரபிக்களையும் பின்பற்ற வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயமே தெரியாது. அருகில் இருப்பவர்கள் தான் இதைக் கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். 

 

ஒருவர் உண்மையிலேயே மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேண்டுமென்றே திமிரில் பேசுகிறாரா என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயின் தாக்கத்தால் தான் வித்தியாசமாகப் பேசுகின்றனர். மாத்திரைகள் மட்டுமல்லாது இந்த நோயை குணப்படுத்த ஊசிகளும் இருக்கின்றன. மருந்து சாப்பிட மறுப்பவர்களுக்கு அவர்கள் குடிக்கும் தேநீரில் அல்லது ஜூஸில் அவற்றைக் கலந்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு நாம் செய்யும் நன்மைதான்.

 

மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சையைத் தொடங்கிய பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இயல்பான மனநிலைக்கு வருவார்கள். இப்போது மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுபவர்களை அரசாங்கமும், சமூக இயக்கங்களும் கண்டறிந்து மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இந்த நோய் குணமாக வேண்டும் என்றால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தன்மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒருவர் தனக்கு அருகில் இருந்தால் நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமாகும் வாய்ப்புண்டு.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவுக்கு காரணம் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Dr RadhikaMurugesan | Relationships | Marriage |

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணத்தை மீறிய உறவின் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார்.

கள்ளக் காதலை முதலில் திருமணத்தை தாண்டிய உறவு என்று சொல்வது சரியாக இருக்கும். கள்ளக் காதலுக்காக கணவனையும் மனைவியும் கொல்லப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது இப்பொழுது தான் அதிகமாக செய்திகளில் வெளியே வருகிறது. சமூகத்தில் விவாகரத்தை இயல்பாக பார்ப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் கணவன், குழந்தைகள் தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பதால் அந்த ஒரு நொடியில் ஏற்படும் கட்டுப்பாட்டை மீறின கிளர்ச்சியால் இப்படி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை சமூகத்தோடு பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.  எல்லாரும் இதுபோல செய்வதில்லை. வேறொரு உறவு இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி அல்லது கணவனை, குழந்தைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்துவார்கள். இதிலிருந்து எப்படி வெளியே வர முடியுமோ அதற்கான வழிகளை செய்து தானே தெளிவாக விலகி விடுவர். ஆனால் எங்கு ஒரு கசப்பான திருமண உறவு இருக்கிறதோ அங்கு தான் இதுபோன்று கொல்லும் அளவிற்கு மனநிலையில் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று செய்பவர்கள் நிலையான மனநிலையிலும் இருக்கமாட்டார். ஒருவித மனநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.

தனக்கென்று ஒரு மதிப்பில்லை, திருமணம் வேலை செய்யவில்லை அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லை என்ற விரக்தியில் கிடைத்திருக்கும் வேறொரு உறவை ஒரு அழகான தப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிலை வருவதற்கு முன்னர் எவ்வளவோ நடந்திருக்கும். ஆனால் வெளியே செய்தியாக வரும்போது அது தெரிவதில்லை. ஒருவர் மட்டுமே குற்றவாளியாக பார்க்கிறோம். தற்போது பெரும்பாலும் பெண்களே அதிகமாக இதில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய சமூகம் மோனோகெமி என்ற உறவுமுறை சார்ந்தது. இது இனச் சேர்க்கையை சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்தே இருக்கிறது. ஆனால் நிறைய ஆய்வுகளில் மனிதனின் இயற்கையான உள்ளுணர்விற்கு போலிகாமி என்ற உறவுமுறை தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆரோக்கியமான உறவில் கூட இதுபோன்ற ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் திருமண உறவை முன்னிலைப்படுத்துவார்கள். சர்வதேச அளவில் கூட இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவுக்கென்றே செயலி கூட இருக்கிறது. அதை 2 மில்லியன் இந்திய பயனாளிகள் பயன்படுத்துவதில், 60 சதவிகிதம் அதை பெண்களே உபயோகம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஐந்து சதிவிகிதம் மட்டுமே காதல் திருமணம் நடக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய சமூக மாற்றத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியாத உறவில் நிலைத்து இருப்பது என்பது சாத்தியம் குறைவாக இருக்கிறது. ஈர்ப்பும் குறைகிறது. திருமணம் ஆகி வெறும் தாய் மற்றும் ஒருவருக்கு மனைவி அடையாளம் தவிர ஒன்றுமில்லாமல் தனக்கான தேவைகள் எதுவும் அந்த திருமணத்தில் நிறைவேறாத போதும் தன்னுடைய சுயமதிப்பை இழக்கும் போது தான் தனக்கென்று தேவையை நோக்கி செல்லும்படி ஆகிறது. மேலும் அதற்கான வழிகளை இன்றைய இணைய வசதிகள் சுலபப்படுத்தி விடுகின்றன.

ஆண்களை விட பெண்களே இதுபோன்ற விஷயத்தில் தள்ளப்பட காரணம், அவர்களின் உணர்வுகளை அதிகமாக பொருட்படுத்தாததுதான்.  ஆண்களை விட மன அழுத்தம் பெண்களுக்கு இருமடங்கு இருக்கும். உதாரணமாக உடல்நிலை சரி இல்லை என்று வெளியே சொன்னாலும் கூட அவர்கள் பலவீனமானவர்கள் என்று உதாசீனப்படுத்துவது என்பது நடக்கிறது. இதனால் தான் எங்கு நம் எமோஷனல் தேவைகள் பூர்த்தி ஆகிறதோ அங்கே அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதுதான் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவைப்பது மற்றும் குடும்பத்தை கொல்ல வைக்கும்  அளவுக்கு எல்லை தாண்டிய முடிவுகளை எடுக்க வைக்கிறது.