Skip to main content

5 பெண்களை கர்ப்பமாக்கிய 2கே கிட்? - தீயாய் பரவிய செய்தி; ஆவேசமான இளம்பெண்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
zeddy will cha cha baby shower fake

அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரில் இசைக் கலைஞராக வலம் வருபவர் ஸெட்டி வில்ஸ். 22 வயதான 2கே கிட் ராப் பாடகரான இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். சாச்சா என்ற ராப் பாடல் மூலம் பிரபலமானதால், ரசிகர்கள் இவரை 'சாச்சா ஸெட்டி' என அழைக்கின்றனர். இவருக்கு டிக்டாக்கில் மட்டும் 67 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் மேலாளராகவும் உள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆஷ்லே, போனி, கேய் மேரி, ஜிலீன் விலா மற்றும் ஐயன்ல கலிஃபா கலெட்டி என்ற 5 பெண்கள் அறிமுகமாகினர். இவர்கள் 5 பேருடனும் டேட்டிங்கில் இருந்த ஜெடி வில், தற்போது அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில், ஸெட்டி வில்ஸ் டேட்டிங்கில் இருந்த 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி, ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தினார் எனக் கூறி வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோவை  29 வயது நிறைந்த பாடகியான நியூயார்க் நகரைச் சேர்ந்த 'லிஸ்ஸி ஆஷ்லிக்' என்பவர் வெளியிட்டிருந்தார். இவர், தனது சமூக வலைத் தளத்தில், 'லிட்டில் ஸெட்டி வில்ஸ்சின் 5 குழந்தைகளை வரவேற்கிறோம்' என தலைப்பு குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகமெங்கும் வைரலானது. இதனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடனும் சிலர் ஏக்கத்துடனும் பகிர ஆரம்பித்தனர்.

அதிலும், அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டிருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகவே, நெட்டிசன்கள் பலரும் அந்த வலைத்தள பதிவிற்கு கமென்ட் செய்தனர். அதில், கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் பலரும், ''இது எப்படி சாத்தியம்? இது நம்பும் வகையில் இல்லை.. உங்கள் 5 பேருக்கு இடையே சண்டையே வராதா?  எப்படி 5 பெண்களும் பொறாமை மற்றும் கோபம் இல்லாமல் ஒரே நபர் மூலம் கர்ப்பம் அடைந்து, ஒரே இடத்தில் Baby Shower கொண்டாட முடியும்'' எனப் பல கேள்விகளை கேட்டுத் துளைத்து எடுத்தனர். 

இதற்கிடையில், இந்த செய்தியைப் பகிர்ந்த சிலர், 90ஸ் கிட்ஸ்களின் நிலையையும், 2கே கிட்ஸ்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு சிரித்து மகிழ்ந்தனர். இதையடுத்து, 5 பெண்களும் தாய்மை அடைந்ததை பற்றி பதிவில் எழுதிய லிஸ்ஸி, ''நடந்ததை எதையும் மாற்ற முடியாது. எங்கள் 5 பேரின் குழந்தைக்கு அப்பா ஒருவர்தான். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெறுகிறது. 5 பேருடன் பல நேரங்களில் அவர் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டோம். குழந்தைகளுக்கும் இது நல்லதாக இருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.  

மேலும், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும்'' எனக் குறிப்பிட்டு பதிவிட, இப்படி ஒரு குடும்பமா? என நெட்டிசன்களே உலக அளவில் வியந்து பார்த்தனர். அதிலும், இதில் இன்னொரு சுவாரஸ்ய விஷயமாக, அந்த 5 பேரில் இருவருக்கு ஒரே நாளில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, இது போலியானது லைக்கிற்காக செய்த செயல் என சில கருத்துகள் இணையத்தில் வலம் வந்தன. 

இந்த நிலையில், வீடியோ வெளியிட்ட பாடகி 'லிஸி ஆஷ்லீக்' திடீரென ஜனவரி 23 ஆம் தேதி புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் கர்ப்பமாக இல்லை எனக்கூறி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து வீடியோவில் பேசிய லிஸி ஆஷ்லீக், ''இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள். இந்த செய்தி வெகுதூரம் சென்றுவிட்டது. இந்த செய்திகள் மற்றும் தொலைக்காட்சி கட்டுரைகளில் உண்மையில்லை. நான் கர்ப்பமாக இல்லை. என் வயிற்றை நீங்களே பாருங்கள். எனது பெயர்களை பின்னாட்களில் கூகுளில் தேடினால் தவறாகத்தானே இந்த செய்திகள் சித்தரிக்கும். நான் கர்ப்பமாக இல்லை. இது ஒரு மியூசிக் வீடியோவுக்காக எடுத்தது, அது பற்றி பேச எனக்கு அனுமதியில்லை. ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம்'' என ஆவேசமாக கூறினார். இந்த திடீர் திருப்பம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.