Skip to main content

கொரோனா வைரஸ் விவகாரத்தில் தவறு நடந்துவிட்டது - உலக சுகாதார அமைப்பு மன்னிப்பு!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 5000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 17 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலை சரியாக கவனிக்க தவறிவிட்டோம் என்று தற்போது அறிவித்துள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்