Skip to main content

வெள்ளை மாளிகையின் மீது பறந்த மர்ம விமானம்... அதிர்ச்சியில் உறைந்த பாதுகாப்பு படையினர்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் வசித்து வருகிறார். இந்த மாளிகையே டிரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக இருந்து வருகிறது. இது 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும். கடந்த 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக வெள்ளை மாளிகைக்கு மேலே அனுமதியின்றி விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது.
 

h



இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெள்ளை மாளிகைக்கு மேலே மர்ம விமானம் ஒன்று பறந்தது ரேடார் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெள்ளை மாளிகையை சுற்றிப்பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைக்காக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. மர்ம விமானத்தை கண்டறிய உடனடியாக போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. எனினும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளை மாளிகைக்குள் சிக்கிய மர்மப் பொருள்; பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

mystery object found in White House near where guests enter West Wing

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகை உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட கட்டடமாகும். அந்த வெள்ளை மாளிகையில் நேற்று இரவு பவுடர் போன்ற பொருளை அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த  நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை.

 

இந்த பொருள் தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  இதனால் வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், முன் எச்சரிக்கைக்காக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டவர்கள் முதற்கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு நடந்த சோதனையில், அந்த மர்மப் பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.

 

பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பவுடர் போன்ற மர்மப் பொருள் என்ன என்பதைப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அந்த பரிசோதனையில், அந்த மர்மப் பொருள் கோகெய்ன் என்ற போதைப் பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Next Story

பிரதமரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல்; வெள்ளை மாளிகை கண்டனம்!

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

White House condemned the threat to the journalist who questioned pm modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார்.  அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன், செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜெனல் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி, “உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஜனநாயகம் எங்கள் ரத்தத்திலும், உணர்விலும் உள்ளது. எங்கள் அரசியல் சாசனத்தில் எங்கள் முன்னோர்கள் ஜனநாயகத்தை ஊக்குவித்துள்ளனர். அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக விதிமுறைகளை எனது அரசு பின்பற்றுகிறது. இதில் ஜாதி, இன, மத ரீதியாக எந்த பாகுபாட்டையும் நாங்கள் பார்ப்பதில்லை. மனித நேயம், மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்றால், எந்த நாட்டையும், ஜனநாயக நாடு என அழைக்க முடியாது. இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறும்போது, பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் இந்தியா முன்னேறுகிறது. இந்தியாவின் ஜனநாயக விதிமுறைகளில் ஜாதி, மத ரீதியான பாகுபாடு இல்லை” எனப் பதிலளித்தார். 

 

இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி எதிராக சமூக வலைத்தளங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையாக கண்டித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; பத்திரிகையாளர் மீதான இந்த அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

 

இதனிடையே பிரதமரின் அமெரிக்க பயணம் தொடர்பாக முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.