Skip to main content

கே.பாலசந்தரின் சிலையை சேர்ந்து திறந்து வைத்த ரஜினி, கமல்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர், கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

TAMIL FILM DIRECTOR BALACHANDER STATUE OPENING CEREMONY


 

அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றி வருகின்றன. ஏற்கனவே நேற்று (07/11/2019) பரமக்குடியில் உள்ள தனது இல்லத்தில் தந்தை சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்