Skip to main content

மலேசியாவில் சீஃபீல்டு மாரியம்மன் கோவில் இடமாற்றம்....18 வாகனங்கள் தீவைப்பு...

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
malaysia


மலேசியாவில் மாரியம்மன் கோவில் இடமாற்றம் செய்வதை கண்டித்து நடந்த வன்முறையில் 18 வாகனங்கள் தீக்கு இறையாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

மலேசியா, சொலாங்கூர் மாவட்டத்திலுள்ள 127 ஆண்டுகள் பழமையான சீஃபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மலாய் பேசும் மக்களில் ஒரு பிரிவினர் முயற்சித்து வந்தனர்.
 

இதற்கு அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட 200 இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சொலாங்கூர் நீதிமன்றம், கோவிலை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது. 
 

இதனையடுத்து கோவிலை கைப்பற்ற வந்தவர்களிடம் இந்தியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், சில நபர்கள் அந்த பகுதியில் இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். போலிஸார் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. 
 

18 வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தீக்கு இறையானதால் உடனடியாக அந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலிஸார்கள் குவிக்கப்பட்டனர். கலவரத்தை கலைத்த போலிஸார், கலவரத்தை தூண்டியதாக 17 பேரை கைது செய்தனர். போலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 
 

இந்த கோவில் 1891 கட்டப்பட்டுள்ளது. 127 ஆண்டுகளாக இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோவில் இடத்தை ஒன்சிட்டி நிறுவனம் வாங்கியதால், கடந்த 2007ஆம் ஆண்டு கோவிலை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், 2014ஆம் ஆண்டு நீதிமன்றம் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், அதற்கான நிதியை ஒன்சிட்டி நிறுவனம் அளித்தது. கடந்த 22ஆம் தேதியில் இருந்து இக்கோவிலை இடமாற்றம் செய்ய மலாய் குழுவினர் முயற்சி செய்கையில், நேற்று (திங்கள்கிழமை) கலவரம் வெடித்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rajini meets malaysia pm

 

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. 

 

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

மலேசியாவில் அஜித் ரசிகர்கள் சாதனை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Ajith fans record in Malaysia

 

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

 

முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, மலேசியாவில் துணிவு பட வெளியீட்டை முன்னிட்டு அஜித்திற்கு 9.144 மீட்டர் உயரம் கோண்ட கட்அவுட் வைத்து அஜித் ரசிகர்கள் சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரம் கொண்ட கட்அவுட் யாரும் வைத்ததில்லை என்றும், அஜித்திற்கு தான் முதல் முறை என்றும் மலேசிய அஜித் ரசிகர்கள் சொல்கின்றனர். 

 

மேலும், ஒரு நடிகருக்கு அதிக உயரம் கொண்ட கட்அவுட் வைத்துள்ளதால் மலேசிய சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் துணிவு பட மலேசிய உரிமத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த கட்அவுட் புகைப்படத்தையும் சாதனை சான்றிதழையும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.