Skip to main content

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த ஜெப் பெஸோஸ்...

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

jeff

 

 

நேற்று, சர்வதேச சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதம் வரை குறைந்தது. இதன் காரணமாக ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்ததுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 105.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் காதல்; பில்கேட்ஸ் சூசகம்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Love Again; Bill Gates hinted

 

மைக்ரோ சாஃப்ட் நிறுவனரும் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். 27 ஆண்டுகள் நீடித்திருந்த அவர்களது  திருமண வாழ்க்கை அப்போது முடிவுக்கு வந்தது. 

 

தற்போது 67 வயதான பில்கேட்ஸ் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி பவுலா ஹர்ட் (60) மீது பில்கேட்ஸ் காதல் வயப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் ஒன்று, ‘பில்கேட்ஸும் பவுலாவும் டேட் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், பவுலா இன்னும் பில்கேட்ஸின் பிள்ளைகளை சந்திக்கவில்லை’ எனக் கூறியுள்ளது. பில்கேட்ஸுக்கு ஜென்னர்(26), ரோரி (23) மற்றும் போப் (20) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை இருவரும் ஒன்றாக பார்த்து ரசித்தனர். உங்களுக்கு மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு அவர், "கண்டிப்பாக நான் ஒன்றும் ரோபோ இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.

 

 

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் டாக்; புதிய முயற்சியில் அன்பில் மகேஷ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Talk with Microsoft for public school students!; Anbil Mahesh in a new venture

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 

கடந்த அக்டோபரில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். முடிவுகளை வெளியிட்ட பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “எந்த நிகழ்விற்குப் போனாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைப்பவன். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது கூட அவரிடம் பேசினேன். சார், ஏதோ தனியா க்ளாஸ் வச்சு நடத்துறதா கேள்விப்பட்டேன். அதில் அரசுப்பள்ளி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டு உள்ளோம் என்று சொன்னார். உள்ளபடியே மகிழ்ச்சி. 

 

அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போய் பார்த்தோம். டீல்ஸ் என்ற அமைப்பின் மூலமாக ஐ.டி. துறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் நபர் அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று தான் பணியாற்றும் துறை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அதைப் பார்க்க முடிந்தது. இதே போன்ற நிகழ்வை நீங்கள் எங்கள் பள்ளி மாணவர்களிடமும் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லியுள்ளோம். 

 

வெறுமனே நீங்கள் பாடம் நடத்திச் செல்வதைக் காட்டிலும் உங்கள் நிறுவனத்தின் சான்றிதழ் கிடைத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து செல்லும்போது அவர்களுக்கு இன்னும் அது மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நிறுவனத்தில் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்லுகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.